பதட்டமும் தைரிய குறைச்சலும் இருந்தது.. 'மாநாடு' படம் குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி!

  • IndiaGlitz, [Friday,November 25 2022]

சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான ‘மாநாடு’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஒரு வருடம் நிறைவு பெற்றதை அடுத்து இந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நெகிழ்ச்சியுடன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

சின்னதா ஒன்றை ஆரம்பித்தால்‌ தைரியம்‌ கொஞ்சம்‌ கூடவே இருக்கும்‌...

ஆனா கொஞ்சம்‌ அகலமாகக்‌ கால்‌ பதிக்கும்போது மிகப்‌ பதட்டமும்‌,தைரியக்‌குறைச்சலும்‌ தானாகவே வந்துவிடும்‌.

‘மாநாடு’ படத்தைத்‌ தொடங்கியபோது அந்த இரண்டையும்‌ கடந்து அடுத்த கட்டம்‌ அடைந்தேன்‌.

அதற்குப்‌ பெருந்துணையாக இருந்தது சிம்பு, இயக்குநர்‌ வெங்கட்‌ பிரபு ,எஸ்.ஜே சூர்யா, லிட்டில்‌ மேஸ்ட்ரோ யுவன்‌, கல்யாணி பிரியதர்ஷன்‌ மற்றும்‌ நடித்த அனைத்து நடிகர்‌ நடிகைகள்‌, ஃபைனான்சியர்கள்‌ உத்தம்‌ சந்த்‌ அவர்கள்‌ மற்றும்‌ திருப்பூர்‌ சுப்ரமணியன்‌ அண்ணா, ஒளிப்பதிவாளர்‌ ரிச்சர்ட்‌ எம்‌ நாதன்‌, எடிட்டர்‌ கே.எல்‌.பிரவீண்‌, கலை இயக்குநர்‌ உமேஷ்‌, சண்டைப்‌ பயிற்சி ஸ்டண்ட்‌ சில்வா, உதவி இயக்குநர்கள்‌, சிலம்பரசனின்‌ ரசிகர்கள்‌, தொழில்‌ நுட்பக்கலைஞர்கள்‌, ஊடக மற்றும்‌ பத்திரிகை நண்பர்கள்‌, சக தயாரிப்பாளர்கள்‌, விநியோகஸ்தர்கள்‌, திரையரங்க அதிபர்கள்‌, அலுவலக ஊழியர்கள்‌, பி ஆர்‌ ஓ என மாநாடு படத்திற்காக உழைத்த அத்தனை பேரும்தான்‌.

இந்த ஒரு ஆண்டு நிறைவு நாளில்‌ அனைவருக்கும்‌ நிறைந்த மனதுடன்‌ நன்றி கூறிக்கொள்கிறேன்‌.

என்‌ எல்லா பயணத்திலும்‌ நீங்கள்‌ உடனிருக்கும்‌ நம்பிக்கையில்‌ உழைக்கிறேன்‌.

மீண்டும்‌ மீண்டும்‌ நல்ல படங்களைத்‌ தர விளைகிறேன்‌.

More News

ரஜினியின் 'பாபா' படத்தில் அனிருத்? ஆச்சரியமான தகவல்!

தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு உருவான '3' என்ற படத்தில்தான் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார் என்பது அனைவரும் அறிந்ததே.

நீதிபதியே சரியில்லை.. அசீம் கூறிய பரபரப்பு குற்றச்சாட்டு!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நீதிமன்ற டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் இந்த டாஸ்க்கில் நீதிபதிகளே தீர்ப்பில் சொதப்புவதும், நீதிபதிகள் மீது வழக்கறிஞர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள்

மருத்துவமனையில் கமல்ஹாசன்.. இந்த வாரம் பிக்பாஸை தொகுத்து வழங்குவது யார்?

உலக நாயகன் கமல்ஹாசன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால் இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது யார் என்ற கேள்வியை ரசிகர்கள்

நான் உங்களுக்கு என்ன செய்தேன்? கண்கலங்கிய விஜய்டிவி பிரியங்கா

விஜய் டிவியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக பணிபுரிந்து வரும் பிரியங்கா தனது சமூக வலைத்தளத்தில் நான் உங்களுக்கு என்ன செய்தேன்? நீங்கள் ஏன் இவ்வளவு என் மேல் அன்பு காட்டுகிறீர்கள்?

சினிமா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஷகிலாவுக்கு தடை.. ஷகிலாவின் பதில் என்ன தெரியுமா?

சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள நடிகை ஷகிலாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு ஷகிலா கூறிய பதில் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.