'மாநாடு' படத்தின் படப்பிடிப்பில் திடீர் மாற்றம்!

  • IndiaGlitz, [Friday,February 28 2020]

சிம்பு நடிப்பில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட்பிரபு இயக்கும் ’மாநாடு’ திரைப்படத்தின் பூஜையுடன் கூடிய கட்ட படப்பிடிப்பு கடந்த 19ஆம் தேதி சென்னையில் தொடங்கியது என்பதும் அதன் பின்னர் மூன்று நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு நடந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இன்று முதல் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்தது. இந்த நிலையில் திடீரென படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டிக்கு பதிலாக சென்னையிலுள்ள விஜிபி கோல்டன் பீச்சில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து விஜிபி கோல்டன் பீச்சில் குறுகிய காலத்தில் ஒரு செட் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த படப்பிடிப்பு தளத்தில் இந்த படத்தின் முக்கிய பகுதிகள் அனைத்தும் படமாக்க படக்குழுவினர் திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. சென்னையில் ஷூட்டிங் நடப்பதை சிம்பு விரும்பியதாகவும், அதனால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துவருகிறார். மேலும் இந்த படத்தில் பாரதிராஜா, எஸ்ஏ சந்திரசேகர், எஸ்ஜே சூர்யா, பிரேம்ஜி அமரன், அரவிந்த் ஆகாஷ் உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.