close
Choose your channels

சிம்புவின் 'மாநாடு' தொடங்கும் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு

Tuesday, February 18, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகவிருக்கும் ‘மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் நாளை முதல் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் இந்த படப்பிடிப்பில் சிம்பு உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ள வைப்பதாகவும் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார். ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சுமார் ஒரு மாதம் நடைபெற உள்ளதாகவும் இதில் கிட்டத்தட்ட 30 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து அடுத்தகட்ட படப்பிடிப்பு ஒரு சிறிய இடைவெளிக்கு பின் தொடங்கும் என்றும் இந்த ஆண்டுக்குள் இந்த படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

மாநாடு படத்தில் சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஏ. சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, கருணாகரன், பிரேம்ஜி அமரன், மனோஜ், டேனியல் உள்பட பலர் நடிக்கவுள்ளனர். யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் ரிச்சர்ட் நாதன் ஒளிப்பதிவில் ப்ரவீண் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.