செப்.31க்கு அப்புறம் நம்ம ஆட்டம் தான், தெறிக்க விடுவோம்: சிம்பு தயாரிப்பாளரின் டுவிட்!

சிம்பு படத்தின் தயாரிப்பாளர் செப்டம்பர் 31ம் தேதிக்கு பிறகு நம்ம ஆட்டம்தான், தெறிக்க விடுவோம் என்று ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், உருவாகியுள்ள ’மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும், இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வரும் ஆயுத பூஜை தினத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டாலும் அது குறித்த எந்தவித அறிவிப்பும் இல்லை என்பதும் புரமோஷன் பணிகள் இன்னும் தொடங்கவில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ரசிகர் ஒருவர் ’மற்ற அனைத்து நடிகர்கள் நடித்த படங்களின் அப்டேட் வந்து கொண்டிருக்கின்றது. ஆனால் சிம்பு நடித்த ’மாநாடு’ படத்தின் அப்டேட் மட்டும் ஏன் வரவில்லை என சுரேஷ் காமாட்சியிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள சுரேஷ் காமாட்சி, ‘வரும் தம்பி, வெயிட் அண்ட் ஸி, செப்டம்பர் 31க்கு பிறகு நம்ம ஆட்டம்தான், தெறிக்க விடுவோம்’ என்று கூறியுள்ளார். இதனை அடுத்து அடுத்த மாதம் முதல் ’மாநாடு’ படத்தின் அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ரசிகர் ஒருவர் செப்டம்பர் மாதத்தில் 31ம் தேதி இல்லையே அப்படி என்றால் அப்டேட்டே இல்லையா? என்றும் கிண்டலுடன் கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'அண்ணாத்த' படத்தின் முதல் விமர்சனம்: சொன்னது யார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும்

தன்னைத்தானே திருமணம் செய்துகொண்ட மாடல் அழகி… வைரல் புகைப்படம்!

பிரேசில் நாட்டை சேர்ந்த மாடல் அழகி ஒருவர் தனக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட மணமுறிவு காரணமாக தனிமையில் வாழ முடிவெடுத்துள்ளார்.

லெஜண்ட் சரவணன் பட நாயகிக்கு கிடைத்த 40 மில்லியன்: குவியும் வாழ்த்துக்கள்!

சரவணா ஸ்டோர் அதிபர் லெஜண்ட் சரவணன் நடித்து வரும் திரைப்படத்தின் நாயகி ஊர்வசி ரெளட்டாலாவுக்கு 40 மில்லியன் கிடைத்ததை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

பசுவிடம் இருந்து பால் கறந்து டீ போட்டு குடிக்கும் தமிழ் நடிகை: வைரல் வீடியோ

பசுவிடமிருந்து பிரஷ்ஷாக பால் கறந்து, அந்த பாலில் டீ போட்டு குடிக்கும் வீடியோ ஒன்றை தமிழ் நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

மழைபெய்ய வேண்டி… சிறுமிகளுக்கு நிர்வாண பூஜை நடத்தும் கிராம மக்கள்!

மூடநம்பிக்கையில் சிக்கித் தவிக்கும் ஒருசிலர் இன்றைக்கும் மழைக்கடவுளை மகிழ்விக்க வேண்டி சில விபரீதமான சடங்குகளை செய்வதைப் பார்த்திருப்போம்.