close
Choose your channels

சிம்பு படத்தை தடை செய்ய வேண்டும்: இயக்குனரே வழக்கு தொடுத்ததால் பரபரப்பு!

Friday, May 14, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடித்த படத்தை படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும் என அந்த படத்தின் இயக்குனரே நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சிம்பு, ஹன்சிகா நடிப்பில் யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் ஜிப்ரான் இசையமைப்பில் உருவான திரைப்படம் மஹா. இந்த படம் ஹன்சிகாவின் 50வது படம் என்பதும், இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வந்த சிம்பு அதன் பின்னர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடையாத நிலையில் தயாரிப்பாளர் தனக்கு தெரியாமல் படத்தை முடித்துவிட்டு ஓடிடியில் ரிலீஸ் செய்ய முயற்சி செய்வதாக இயக்குனர் யு.ஆர்.ஜமீல் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்

மேலும் இந்த படத்தில் தனக்கு பேசப்பட்ட சம்பளத்தில் பாக்கி இருப்பதாகவும் தன்னுடைய சம்பள பாக்கி பணம் சுமார் 16 லட்சம் ரூபாயை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் யு.ஆர்.ஜமீல் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தயாரிப்பாளர் உட்பட மூவர் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.