இன்று முதல் ஆரம்பமாகும் சிம்புவின் அடுத்த படம்!

  • IndiaGlitz, [Wednesday,July 21 2021]

நடிகர் சிம்புவின் அடுத்த படத்தின் பணிகள் இன்று முதல் ஆரம்பமாக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

சிம்பு நடித்து முடித்த ’மாநாடு’ திரைப்படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றும், வரும் ஆயுத பூஜை தினத்தில் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சிம்பு அடுத்ததாக ‘பத்து தல’ என்ற படத்திலும் ’நதிகளிலே நீராடும் சூரியன்’ என்ற படத்திலும் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது ’நதிகளிலே நீராடும் சூரியன்’ படத்தின் பணிகள் இன்று முதல் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இன்று சென்னையில் இந்த படத்தின் போட்டோசூட் நடப்பதாகவும் இதில் சிம்பு கலந்து கொண்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. கெளதம் மேனன் இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் கவிஞர் தாமரை எழுத உள்ளார்.

ஏற்கனவே கௌதம் மேனன், ஏஆர் ரஹ்மான் மற்றும் சிம்பு கூட்டணியில் உருவான ’விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற திரைப்படம் மாபெரும் ஹிட்டான நிலையில் மீண்டும் இணைந்துள்ள அதே கூட்டணி மீண்டும் ஒரு ஹிட் படத்தை கொடுக்கும் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

More News

எம்.ஜி.ஆர் இயக்கத்தில் “பொன்னியில் செல்வன்“ திரைப்படமா? ஆச்சர்யமூட்டும் வரலாற்றுச் சேதி!

இயக்குநர் மணிரத்னம் தனது கனவு திரைப்படமான “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார்.

வனிதா-ரம்யா கிருஷ்ணன் மோதலில் நடந்தது என்ன? வைரல் வீடியோ

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியின்போது நடிகைகள் வனிதா மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகிய இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டதாகவும்

பின்னணி பாடகியின் 15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை: 5 பேர் மீது பாய்ந்தது போக்சோ சட்டம்!

பிரபல பின்னணி பாடகி ஒருவரின் 15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 5 பேர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ள தகவல்

யாஷிகாவின் டுவிட்டை பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரேம்ஜி! காரணம் என்ன?

பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகை யாஷிகாவின் டுவிட்டை பார்த்து நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி அதிர்ச்சி அடைந்துள்ளார் 

ஏ.ஆர்.ரஹ்மானை யாரென்றே தெரியாது: சீனியர் நடிகரின் பேட்டியால் பரபரப்பு!

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமா உலகிலும், ஏன் உலக அரங்கிலும் ஏஆர் ரஹ்மான் புகழ்பெற்றவர் என்பதும், இரண்டு ஆஸ்கார் விருதுகளை வாங்கி இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் என்பதும்