close
Choose your channels

'பத்து தல' படத்தின் மாஸ் அப்டேட்: சிம்பு ரசிகர்கள் குஷி!

Sunday, September 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடித்த ’வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவருடைய அடுத்த படமான ’பத்து தல’ படத்தின் மாஸ் அப்டேட் தற்போது வெளிவந்துள்ள நிலையில் சிம்பு ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’பத்துதல’ என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ’பத்துதல’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு செப்டம்பர் 27ஆம் தேதி தொடங்குவதாகவும், சென்னையில் நடைபெறும் இந்த படத்தின் படப்பிடிப்பை அடுத்து இறுதிகட்டப் படப்பிடிப்பு விரைவில் பெல்லாரியில் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஒரு பக்கம் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே இன்னொரு பக்கம் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் 14ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படக்குழுவினர் பணிகளை முடிப்பதில் தீவிரமாக உள்ளனர்.

சிம்பு முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர் என்பதும், இசைப்புயல் ஏஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சூர்யா-ஜோதிகா நடித்த ’சில்லுனு ஒரு காதல்’ என்ற திரைப்படத்தை இயக்கிய கிருஷ்ணா இந்த படத்தை இயக்கி வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.