வேகமாக வளரும் சிம்பு திரைப்படம்: அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே?

சிம்பு நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ’வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது.

இந்த நிலையில் விரைவில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் சிம்பு தனது அதிகபட்ச உழைப்பை கொட்டி வருகிறார் என்றும் குறிப்பாக சண்டைக் காட்சிகளில் அவர் அதிக ரிஸ்க் எடுத்து நடித்து வருகிறார் என்றும் படக்குழுவினர் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மும்பை படப்பிடிப்பு முடிந்தவுடன் அடுத்ததாக நான்காம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏஆர் ரகுமான் இசையில் உருவாகிவரும் இந்த படத்தை ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதி வருகிறார். கவிஞர் தாமரை பாடல் வரிகளில், சித்தார்த்தா நுனி என்பவரின் ஒளிப்பதிவில், அந்தோணி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

தண்டோரா மூலம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட தமிழ் திரைப்படம்!

முற்றிலும் புதுமுகங்கள் நடித்த திரைப்படம் ஒன்று தண்டோரா, குடுகுடுப்பைக்காரர்கள் மூலம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதன் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

இளையராஜா - கமல்ஹாசன் சந்திப்பு: புகைப்படங்கள், வீடியோ வைரல்!

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் இசைஞானி இளையராஜா ஆகியோர் திடீரென இன்று சந்தித்து கொண்டதை அடுத்து இந்த சந்திப்பின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரல் ஆகி வருகின்றன.

விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்து தெரிவித்த ப்ரியங்கா சோப்ரா: காரணம் இதுதான்!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான விக்னேஷ் சிவனுக்கு பாலிவுட் முன்னணி நடிகை பிரியங்கா சோப்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்

தனியார் ரிசார்ட்டில் நிர்வாண நடனம், போதைப்பொருள்… தட்டித் தூக்கிய போலீஸ்!

தமிழ்நாடு மற்றும் கர்நாடக எல்லைப் பகுதியான பெங்களூர் சாலையில் உள்ள தனியார் ரிசார்ட்

விவசாயி வங்கிக் கணக்கில் 52 கோடி ரூபாய்? தொடர் கதையாகும் மர்மம்!

பீகார் மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 6 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்களின்