'புதிய பாதை 2' ஹீரோ யார்? பார்த்திபனின் பரபரப்பு தகவல்

  • IndiaGlitz, [Wednesday,September 30 2020]

பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் இயக்கி நடித்த முதல் திரைப்படம் ’புதிய பாதை’. கடந்த 1989ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் வசூல் ரீதியில் மிகப்பெரிய சாதனை செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் இந்த படம் சிறந்த தமிழ் படம் மற்றும் சிறந்த துணை நடிகை ஆகிய இரண்டு தேசிய விருதுகளை பெற்றது என்பதும் சிறந்த துணை நடிகைக்கான விருதை மறைந்த பழம்பெரும் நடிகை மனோரமா பெற்றார் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி தமிழக அரசின் சிறந்த படம் மற்றும் சிறந்த கதாசிரியர் என்ற விருதையும் இந்த படம் வென்றது

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து செய்திகள் கடந்த சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இந்த படம் குறித்து ரசிகரின் கேள்வி ஒன்றுக்கு சமீபத்தில் பதிலளித்த பார்த்திபன் ’புதிய பாதை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதாக இருந்தால் அதில் சிம்பு நடித்தால் நன்றாக இருக்கும் என்று நான் கருதினேன். இது குறித்து சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கின்றது. விரைவில் ’புதிய பாதை 2’ குறித்து அறிவிப்பு வெளிவரும் என்று கூறினார்

அதே போல் தன்னுடைய ’உள்ளே வெளியே’ திரைப்படத்தை ரீமேக் செய்வதாக இருந்தால் அதிலும் ஹீரோ கேரக்டருக்கு பொருத்தமாக சிம்பு மட்டுமே இருப்பார் என நான் கருதுகிறேன்’ என்று கூறியுள்ளார். பார்த்திபனின் இந்த பதிலால் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

More News

அந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நான் இல்லை: தங்கர்பச்சான் விளக்கம்

கடந்த 1998ஆம் ஆண்டு மம்முட்டி, தேவயானி ரஞ்சித் நடிப்பில் பாரதி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் 'மறுமலர்ச்சி'. இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து

பீச், பிங்க் கலர், சன் செட்: 'மாஸ்டர்' நாயகியின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போஸ்ட்!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தில் நாயகியாக நடித்துள்ள மாளவிகா மோகனன் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்

அமெரிக்காவின் மிக மிக மோசமான அதிபர் டிரம்ப்: ஜோ பிடன் விளாசல்

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் நிலையில் தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார்.

கொரோனா வறுமையிலும் நேர்மையாக நடந்து கொண்ட ரஜினி ரசிகரான ஆட்டோ டிரைவர்!

விபத்து காரணமாக காயமடைந்த தனது மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையிலும் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக குடும்பமே வறுமையில் இருக்கும்

அரசியல் பரபரப்புக்கு இடையே தமிழ்ப்பட படப்பிடிப்பில் கங்கனா ரனாவத்!

கடந்த சில நாட்களாக அகில இந்திய ஊடகங்களில் தலைப்பு செய்திகளில் இடம் பெற்று வருபவர் கங்கனா ரணாவத். சுஷாந்த்சிங் தற்கொலை குறித்து பரபரப்பான கருத்துக்களை கூறிய அவர் மகாராஷ்டிரா அரசுக்கு