close
Choose your channels

காவல் ஆணையரிடம் புகார் அளித்த உஷா ராஜேந்தர்: சிம்பு பிரச்சனையா?

Wednesday, October 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சிம்பு படங்களின் பிரச்சனை குறித்து உஷா ராஜேந்தர் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிம்பு நடித்த ’அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற திரைப்படம் பெரும் பிரச்சினைக்கு உள்ளாகியது என்பதும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு சிம்பு சரியாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும் அதனால் இந்த படம் படு தோல்வி அடைந்ததாகவும் தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டது

இந்த நிலையில் சிம்புவின் மற்ற படங்கள் வெளியாகும்போது ’அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம் சம்பந்தமாக தயாரிப்பாளர் சங்கங்கள் அவருடைய படத்திற்கு தடை போடுவது வழக்கமாகி வருகிறது

இந்த நிலையில் சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் அவர்கள் இன்று காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ’அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ திரைப்படத்தின் பிரச்சனை தொடர்பாக புகார் அளித்துள்ளார். இந்த புகாரில் சிம்புவின் திரைப்படங்கள் வெளியாகும் சமயத்தில் தயாரிப்பாளர் சங்கங்கள் பிரச்சனையை ஏற்படுத்துவதாகவும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிகிறது

சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படம் வரும் நவம்பர் 27ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்திற்கும் தயாரிப்பாளர் சங்கங்கள் பிரச்சனை செய்யலாம் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையிலேயே இந்த புகார் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.