close
Choose your channels

நீங்கள் மட்டுமே என் உத்வேகம்: ரசிகையின் கடிதத்தை பார்த்து கண்கலங்கிய சிம்பு!

Tuesday, October 27, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடித்துவரும் ’ஈஸ்வரன்’ படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது என்பதும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சிம்புவின் வெறித்தனமான ரசிகை ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் நெகழ்ச்சியுடன் கூடிய ஒரு பதிவு செய்துள்ளார். அவர் அந்த பதிவில் கூறியதாவது:

எனக்கு கடந்த 3 நாட்களாக தொண்டை வலி, தலைவலி மற்றும் காய்ச்சல் உள்ளது. என்னால் எதையும் பதிவு செய்ய முடியவில்லை. வாழ்க்கை நிலையில்லாதது என்பதை புரிந்து கொண்டேன். எனக்கு அடுத்து என்ன நடக்கும் என தெரியாது, எல்லாம் கடவுளின் கையில் உள்ளது என்று உருக்கமான பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த குறுஞ்செய்தி சிம்பு சாருக்காக என்று கூறி அவர் கூறியதில், ‘நீங்கள் மீண்டும் சமூக வலைதள பக்கம் வந்ததற்கு நன்றி. உங்கள் அடுத்த படத்தின் மோஷன் போஸ்டர் என்னை மெய்சிலிர்க்க வைத்தது, அதை பார்த்து எனக்கு பேச்சே வரவில்லை. என் வாழ்க்கையில் நீங்கள் மட்டும் தான் உத்வேகம் தருகீறீர்கள். உங்களின் வசனங்கள், பாடல்கள், படங்கள் மூலம் எனக்கு நம்பிக்கை, அன்பு, உற்சாகம் கிடைக்கின்றது. அதற்கு நன்றி’ என்று கூறியுள்ளார்.

ரசிகையின் இந்த கடிதத்தை பார்த்து சிம்பு கண்கலங்கியதாக சிம்புவின் நெருங்கிய நண்பரான மகத் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.