சிம்பு ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷல் தகவல்.. இன்று பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


சிம்பு நடிக்க இருக்கும் 49வது படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வந்து கொண்டிருக்கும் நிலையில், இன்று இந்த படத்தின் பூஜை சென்னையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பூஜையில் சிம்பு உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிம்பு ஹீரோவாக நடிக்கும் ’எஸ்.டி.ஆர் 49’ என்ற இந்த படத்தை ’பார்க்கிங்’ படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க உள்ளார்.
இந்த படத்தின் நாயகியாக காயடு லோகர் நடிக்க இருப்பதாகவும், அதேபோல் முக்கிய கதாப்பாத்திரத்தில் சந்தானம் நடிக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்தது.
டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற இருப்பதாகவும், இதனை அடுத்து படப்பிடிப்பு அடுத்தடுத்து தொடங்கி விறுவிறுப்பாக நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
நீண்ட இடைவேளைக்கு பிறகு சிம்பு மற்றும் சந்தானம் இணைந்து நடிக்கும் படம் என்பதால், இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் ‘டிராகன்’ என்ற வெற்றிப்படத்தை அடுத்து காயடு லோகர் நடிக்கும் படம் என்பதும், இந்த படத்திற்கு மேலும் முக்கியத்துவத்தை கூட்டியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments