நாதஸ்வர இசைக்காக 5 முறை பார்த்தேன்.. அஜித் படம் குறித்து சிம்பு கூறிய தகவல்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


அஜித் நடித்த படத்தில் இடம்பெற்ற பாடலின் நாதஸ்வர இசைக்காக அந்த படத்தை ஐந்து முறை பார்த்தேன் என நடிகர் சிம்பு கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கமல்ஹாசனுடன் சிம்பு நடித்த ’தக்லைஃப்’ திரைப்படம் ஜூன் 5ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் புரமோஷனுக்காக அதில் நடித்த நட்சத்திரங்கள் பல ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகின்றனர்.
அந்த வகையில், சிம்பு ஒரு ஊடகத்திற்கு பேட்டி அளித்த போது, "இப்போது எல்லாம் இணையம் இருப்பதால் எளிதாக ஒரு படத்தின் பாடல்களையும், அதில் உள்ள முக்கிய காட்சிகளையும் பார்க்க முடிகிறது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த மாதிரி இல்லை," என தெரிவித்துள்ளார்.
"அஜித் நடித்த 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தில் இடம்பெற்ற 'என்ன சொல்ல போகிறாய்' என்ற பாடலில் ஒரு சிறிய பிட்டாக நாதஸ்வர இசை வரும். அந்த நாதஸ்வர இசையை கேட்பதற்காகவே அந்த படத்தை நான் ஐந்து முறை பார்த்தேன்," என்று கூறியுள்ளார். அந்த காட்சி குறித்த வீடியோவை ரசிகர்கள் தற்போது இணையத்தில் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், சிம்பு தற்போது மூன்று படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அவை: அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் படம், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் படம், 'பார்க்கிங்' படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் படம். இந்த படங்களின் படப்பிடிப்புகள் அடுத்தடுத்து நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments