'STR 50' படத்தின் தயாரிப்பில் இருந்து கமல் விலகியதற்கு நான் தான் காரணம்: சிம்பு


Send us your feedback to audioarticles@vaarta.com


சிம்பு நடிப்பில், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் ’STR 50’ படத்தை கமல்ஹாசன் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், சமீபத்தில் ட்விட்டர் ஸ்பேஸில் பேசிய சிம்பு, அந்த படத்தில் இருந்து கமல் விலகியதற்கு நான் தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.
சிம்பு பிறந்த நாளான பிப்ரவரி 3ஆம் தேதி, அவர் நடிக்க இருக்கும் மூன்று படங்களின் அறிவிப்பு வெளியானது. அதில் ஒன்று ’STR 50’ படம் என்பதும் தெரிந்தது. இந்த படத்தின் கதையில் முதலில் ரஜினிகாந்த் நடிக்க இருந்த நிலையில், அதன் பிறகு அவர் விலகிவிட்டார். இதனை அடுத்து, சிம்பு நடிப்பில், கமல்ஹாசன் தயாரிப்பில் இந்த படம் உருவாக்குவதாக அறிவிக்கப்பட்டு, ஆரம்பகட்ட பணிகளும் தொடங்கியது.
இந்த நிலையில், திடீரென நேற்று முன்தினம், இந்த படத்தை கமல்ஹாசன் தயாரிக்காமல், சிம்புவே தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிம்புவின் புதிய தயாரிப்பு நிறுவனமான ஆத்மன் புரொடக்ஷன் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிக்க உள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த சிம்பு, "இந்த படத்தில் பெரிய ரிஸ்க் இருக்கிறது. அந்த ரிஸ்கை நான் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டாம் என்பதற்காக, நானே தயாரிக்கலாம் என்ற முடிவை எடுத்தேன். கமல் அவர்களிடம் போய் இதை தயங்கி சொன்ன போது, அவர் 'ஏன்?' என்று கேட்டார். 'இல்லை, நானே தயாரிக்கிறேன்' என்று சொன்னதும், அவர் 'ஓகே' சொன்னார். இந்த படத்தில் இருந்து அவராகவே விலகவில்லை. நானாக சென்று இந்த படத்தை தயாரிக்கிறேன் என்று கூறி
தால் தான் அவர் அதற்கு ஒப்புக்கொண்டார்," என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த படத்தின் புரமோஷன் படப்பிடிப்பு அடுத்த வாரம் நடைபெற இருப்பதாகவும், அதன் பிறகு தனது கெட்டப்பை மாற்றி விடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments