'மாநாடு' படப்பிடிப்பில் கட்டாந்தரையில் படுத்து தூங்கிய சிம்பு: வைரல் புகைப்படங்கள்

  • IndiaGlitz, [Saturday,April 03 2021]

நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'மாநாடு’. இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. பிரமாண்டமாக போடப்பட்ட 'மாநாடு’ போன்ற செட்டில் கடந்த சில நாட்களாக இந்த படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பதும் சிம்பு உள்பட படக்குழுவினர் அனைவரும் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இரவு பகலாக நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட சிம்பு மிகவும் எளிமையாக படப்பிடிப்பின் இடையே கட்டாந்தரையில் படுத்து தூங்கிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

ஓரிரு படங்களில் நடித்த நடிகர்கள் கூட தூங்குவதற்கு கேரவன் கேட்கும் காலத்தில், சிம்பு போன்ற பெரிய நடிகர் மண் தரையில் படுத்து தூங்கியது குறித்த புகைப்படங்களை பார்த்து அவரது ரசிகர்கள் பெருமை பெற்றுக் கொண்டிருக்கின்றனர். படக்குழுவினர்களும் சிம்புவின் எளிமை குறித்டு பெருமையாக பேசி வருகின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் முடிந்துவிடும் என்றும் அதன் பின்னர் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்து விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் இந்த திரைப்படத்தில் ஜோடியாக பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்தப் படம் இந்த ஆண்டின் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்த கூடிய திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தேர்தலில் உதயநிதி போட்டியிடக்கூடாது...! புகார் அளித்த பாஜக...!

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியை வேட்பாளர் பட்டியலில் இருந்து தகுதி நீக்கம் செய்யம் வேண்டும் என்று, பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

பிரச்சாரம் செய்ய ஆளில்லாமல் தவித்த வேட்பாளர்...!கைகொடுத்தது நம்ம சித்தி தான்....!

விருதுநகர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம்- சமக சார்பாக களமிறங்கும் வேட்பாளர் பிரச்சாரம் செய்ய ஆளில்லாமல் தவித்து வருகிறாராம்.

50 வருடம் கழித்து காதலருக்கு கடிதம் எழுதிய ஆஸ்திரேலியப் பெண்… 82 வயதிலும் மங்காத காதல் கதை!

பல வடமாநிலங்களில் பேய் கிராமம் என்ற பெயரோடு இன்றைக்கும் ஆள்அரவம் இல்லாமல் வெறிச்சோடி இருப்பதை பலமுறை செய்தித்தாள்களில் படித்து இருப்போம்.

மணப்பெண் தேடித்தருமாறு போலீசில் புகார் அளித்த இளைஞர்… பரபரப்பு சம்பவம்!

திருமணத்திற்கு பொருத்தமான பெண்ணைத் தேடித்தருமாறு உத்திரப்பிரதேச மாநில இளைஞர் ஒருவர் காவல் துறையில் புகார் அளித்து இருப்பதும் கடும் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது

பிகினி உடையுடன் ஊஞ்சல் ஆடும் ராய்லட்சுமி… வைரல் புகைப்படம்!

தமிழில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான “கற்ககசடற” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் ராய்லட்சுமி.