close
Choose your channels

நல்ல மனிதர்களை இழந்து வருகிறோம்: சிம்புவின் இரங்கல் அறிக்கை

Thursday, October 1, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடித்த ’மன்மதன்’ உள்ளிட்ட ஒருசில திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் எஸ்கே கிருஷ்ணகாந்த் நேற்று இரவு தனது வீட்டில் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்ற செய்தியை சற்றுமுன் பார்த்தோம்., மறைந்த தயாரிப்பாளர் எஸ்கே கிருஷ்ணகாந்த் அவர்களுக்கு திரையுலக பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் சிம்பு இதுகுறித்து இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நல்ல மனிதர்களை இழந்து வருகிறோம்‌. "மன்மதன்‌" படம்‌ என்‌ வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவங்களைக்‌ கொண்டது.

என்‌ மீது மிகுந்த அன்பு கொண்டவர்‌ திரு. கிருஷ்ணகாந்த்‌ அவர்கள்‌. "மன்மதன்‌" படத்தை என்‌ மீது நம்பிக்கை வைத்து இயக்கச்‌ சொன்னவர்‌. நீங்க ஸ்கிரிப்ட்‌ பண்ணுங்க. இயக்குங்க என உற்சாகப்படுத்தியதோடு மட்டுமல்லாமல்‌ தனிப்பட்ட முறையில்‌ என்‌ மீது மிகுந்த எதிர்பார்ப்பைக்‌ கொண்ட நல்ல மனிதர்‌. அவரது மரணம்‌ அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கலங்க வைக்கிறது. அவரது இழப்பினால்‌ வாடும்‌ குடும்பத்தினருக்கு
ஆறுதல்களைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. இறைவன்‌ மடியில்‌ அந்த நல்ல ஆத்மா அமைதி கொள்ளட்டும்‌. இவ்வாறு சிம்பு தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சிம்புவின் தந்தையும் இயக்குனருமான டி.ராஜேந்தர், ‘மன்மதன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்த தயாரிப்பாளர் திரு.கிருஷ்ணகாந்த் அவர்கள் நேற்று இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலை கூறி கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன் என்று தயாரிப்பாளர் எஸ்கே கிருஷ்ணகாந்த் குறித்து குறிப்பிட்டிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.