எப்படி இருக்கான் உன் ஆளு? 'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்

  • IndiaGlitz, [Thursday,May 21 2020]

சிம்பு, த்ரிஷா நடிப்பில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த ‘விண்ணை தாண்டி வருவாயோ’ படத்தை யாரும் மறக்க முடியாது. கார்த்திக், ஜெஸ்ஸி கேரக்டர்கள் நம் மனதிற்குள்ளே இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் கேரக்டர்கள். இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில் தற்போது ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற பெயரில் குறும்படம் ஒன்றை இயக்குனர் கவுதம் மேனன் இயக்கி வெளியிட்டுள்ளார்.

யூடியூபில் வெளியாகியுள்ள இந்த குறும்படம் கார்த்திக், ஜெஸ்ஸி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. 12 நிமிடங்கள் மட்டுமே கொண்ட இந்த குறும்படத்தில் சிம்பு, த்ரிஷா இருவரின் போன் வசனங்கள் மட்டுமே உள்ளன. இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்காமல் பேசினாலும், ஒவ்வொரு வசனத்திலும் ஒரு கவிதை இருக்கின்றது என்பதை குறும்படத்தை பார்க்கும்போது உணர முடிகிறது. குறிப்பாக ‘எப்படி இருக்கான் உன் ஆளு’ என்ற சிம்புவின் கேள்விக்கு த்ரிஷா தனது கணவர் குறித்து கூறும் பதில் கவுதம் மேனனுக்கு உரிய கவிதைத்தனம்,

மேலும் சிம்பு இப்பவும் த்ரிஷாவை காதலிப்பதாக கூற, அதற்கு எனக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருக்கின்றார்கள், உன்னை மூன்றாவது குழந்தையாக பார்ப்பதாக கூறும் வசனம், சிம்பு மட்டுமல்ல ரசிகர்களும் எதிர்பாராத கவிதை. சிம்புவுக்கு நம்பிக்கை தரும் வகையில் பேசும் த்ரிஷாவின் கடைசி நிமிட வசனம், அதனால் சிம்புவுக்கு ஏற்படும் தெளிவு, அதிலிருந்து உருவாகும் ‘காதம்பரி’ என்ற காதல் கதை என குறும்படம் முழுவதும் கவுதம் மேனனின் டச் உள்ளது. கார்த்திக், ஜெஸ்ஸி என இரண்டு கேரக்டர்களுக்கும் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் தன்னுடைய பின்னணி இசையால் உயிர் கொடுத்திருக்கின்றார். மொத்தத்தில் ‘விண்ணை தாண்டி வருவாயோ 2’ படத்தை மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்க வைத்துவிட்டது இந்த ‘கார்த்திக் டயல் செய்த எண்”

More News

சென்னையில் இன்றும் 500ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் எத்தனை பேர்?

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களை தமிழக சுகாதாரத்துறை தினந்தோறும் அறிவித்து வரும் நிலையில்

மருத்துவர்களின் மன அழுத்தத்தை போக்கும் 'மாஸ்டர்' பாடல்

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தில் இடம்பெற்ற 'வாத்தி கம்மிங்' பாடல் உலகம் முழுவதும் ஹிட்டானது என்பது தெரிந்ததே.

அவளுக்கான உலகத்தை நான் அமைத்துக் கொடுப்பேன்: பிரபல நடிகர் உறுதி

நடிகர் சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆலியா மானசா ஆகிய இருவரும் தொலைக்காட்சி தொடர்களில் ஒன்றாக நடித்தபோது, இருவருக்கும் காதல் ஏற்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர்

ஆன்லைன் வகுப்புக்காக மொட்டை மாடிக்கு சென்ற இரட்டை சகோதரிகள் தற்கொலை: திடுக்கிடும் தகவல்

ஆன்லைன் வகுப்புக்காக மொட்டை மாடிக்குச் சென்ற இரட்டைச் சகோதரிகள் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

ஜிவி பிரகாஷ் படத்தில் வில்லனாகும் பிரபல இயக்குனர்

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் தற்போது ஒரே நேரத்தில் சுமார் எட்டு படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் அவற்றில் பல படங்கள் நிறைவடையும் நிலையில் உள்ளது