இன்றுடன் நான் ஆல்கஹால் நிறுத்தி ஒரு ஆண்டு ஆகிவிட்டது: சிம்பு

  • IndiaGlitz, [Monday,June 21 2021]

’மாநாடு’ திரைப்படத்தின் சிங்கிள் பாடல் இன்று வெளியான நிலையில் டுவிட்டரில் ரசிகர்களுடன் நடிகர் சிம்பு, நடிகர் எஸ்.ஜே.சூர்யா, இயக்குனர் வெங்கட்பிரபு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் உரையாடினார். அதில் அவர்கள் கூறியதாவது:

சிம்பு: மன்மதன் படத்துக்கு பின் ’மாநாடு’ படத்தில் அழுது நடித்து இருக்கிறேன். ஷாட் நடித்து முடித்த பின்னும் அழுது கொண்டே இருந்தேன். ’மாநாடு’ படத்தில் ஒய்ஜி மகேந்திரனும், எஸ்.ஜே .சூர்யாவும் நடிப்பில் பட்டையை கிளப்பி இருக்கிறார்கள். இன்றுடன் நான் ஆல்கஹால் நிறுத்தி ஒரு ஆண்டு ஆகிவிட்டது. இனி செயல்தான். நம்ம குண்டாக இருக்கிறோம், ஒல்லியாக இருக்குமோ என்பது முக்கியமில்லை. நாம் நேர்மையாக இருக்க வேண்டும் என்பது முக்கியம். நான் இப்படி நல்லா இருக்க ரசிகர்களே காரணம். அவர்கள் பற்றி என்னிடம் பலர் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இனி நீங்க ஹேப்பி ஆக இருப்பீங்க. எல்லாம் நல்லபடியாக நடிக்கும்.

சுரேஷ் காமாட்சி: சின்னப்படங்கள் எடுத்து வந்த என்னை நம்பி சிம்புவும், வெங்கட்பிரபும் ’மாநாடு’ பட வாய்ப்பை கொடுத்தார்கள். அதை சிறப்பாக நிறைவேற்றி உள்ளேன்

வெங்கட்பிரபு: ’மாநாடு’ படத்தின் வேலைகளுக்கு மக்கள், ரசிகர்கள் மரியாதை கொடுப்பார்கள். நான் இயக்கிய அஜித்தின் மங்காத்தா படத்தை விட, ’மாநாடு’ படத்தின் பட்ஜெட் அதிகம்