சிம்பு - வெற்றிமாறன் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்.. சிம்புவின் கேரக்டர் என்ன?


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர் சிம்புவும், இயக்குனர் வெற்றிமாறனும் இணையும் புதிய படம் பற்றிய செய்திகள் ஏற்கனவே வந்த நிலையில், தற்போது அதன் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.
சிம்புவின் 49-வது திரைப்படமாக உருவாகும் இந்தப் படம், 'வடசென்னை' கேங்ஸ்டர் கதைக்களத்தை கொண்டது என தெரிகிறது. சிம்பு ஒரு ரவுடி கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படும் இந்தப் படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். ஆச்சரியப்படும் விதமாக, பிரபல இயக்குனர் நெல்சனும் இதில் ஒரு சிறப்பு வேடத்தில் தோன்றவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ள நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இந்தப் படத்தின் கதை 'ராஜன் வகையறா' என்ற பெயரில் உருவாகி வருவதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்த மேலும் பல முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments