தனுஷின் முதல் முயற்சிக்கு சிம்பு கூறிய வாழ்த்து

  • IndiaGlitz, [Thursday,March 23 2017]

தனுஷ் இயக்கிய முதல்படமான 'பவர்பாண்டி' படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. தனுஷின் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கோலிவுட் திரையுலகமே இந்த டிரைலருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றது.
ராதிகா சரத்குமார், எடிட்டர் ரூபன், சாந்தனு, குஷ்பு, செளந்தர்யா ரஜினிகாந்த், மோகன் ராமன் உள்பட பலர் தங்கள் சமூக வலைத்தளத்தில் தனுஷின் முதல் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தனுஷின் தொழில்முறை போட்டியாளரும், நெருங்கிய நண்பர்களில் ஒருவராகிய சிம்பு, தனுஷூக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இயக்குனர் தனுஷூக்கு வாழ்த்துக்கள். பவர்பாண்டி குழுவினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்' என்று சிம்பு தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 14ஆம் தேதி வெளிவரும் இந்த படம் 60வயது முதியவரின் மெல்லிய காதல், மற்றும் குடும்ப பாசம் என்ற செண்டிமெண்ட் கதையை கொண்ட படம். ராஜ்கிரண், பிரசன்னா, நதியா, சாயாசிங், டெல்லி கணேஷ், ரோபோ சங்கர், வித்யூ ராமன் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ராஜ்கிரணின் சிறு வயது கேரக்டரில் தனுஷ் சிறப்பு தோற்றத்தில் தோன்றியுள்ளார். மேலும் பிரபல தொலைக்காட்சி வர்ணனையாளர் டிடி என்ற திவ்யதர்ஷினியும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

More News

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல். ஓபிஎஸ்-சசிகலா அணியின் சின்னங்கள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக, சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக உடைந்த நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரு அணிகளுக்கும் ஒன்றுபட்ட அதிமுகவின் சின்னமான இரட்டை இலை கிடையாது என்றும் அந்த சின்னம் முடக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

கேப்டன் விஜயகாந்த் மருத்துவமனையில் திடீர் அனுமதி

பிரபல நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் நேற்றிரவு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆர்.கே.நகரில் ஆதரவு யாருக்கு? ரஜினிகாந்த் அறிவிப்பு

கடந்த 1996ஆம் ஆண்டு தேர்தல் ரஜினியின் வாய்ஸ் காரணமாகவே ஆட்சி மாற்றம் நடந்ததாக கூறப்படுவதுண்டு.

'இரட்டை இலை' முடக்கம். சுயேட்சை வேட்பாளர்களாக மாறிய டிடிவி தினகரன் - மதுசூதனன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை கட்டுக்கோப்பாக இருந்த அதிமுக, அவர் மறைந்த ஒருசில நாட்களில் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டு அணிகளாக உடைந்தது. ஆர்.கே.நகர் தொகுதியில் இரு அணிகளும் போட்டியிடுவதால் அதிமுகவின் சின்னமான இரட்டை இலை தங்களுக்கே ஒதுக்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்தன...

இலங்கையில் நடைபெறும் ஈழத்தமிழர் விழாவில் ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம், தனது அறக்கட்டளையின் சார்பில் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு கொடுப்பதற்காக 150 புதிய வீடுகளை கட்டியுள்ளது...