close
Choose your channels

கர்ப்பிணி யானை கொல்லப்பட்டதற்கு பிரபல நடிகை கண்டனம்!

Wednesday, June 3, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கேரளாவில் உள்ள பாலக்காடு பகுதியில் கர்ப்பிணி யானை ஒன்றுக்கு அன்னாசி பழத்தில் வெடிமருந்துகள் வைத்து சாப்பிட கொடுத்து கிராம மக்கள் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் யானையின் மரணத்திற்கு காரணமான அந்த கிராமத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்கள் தற்போது ஓங்கி ஒலித்து வருகிறது

இந்த நிலையில் இது குறித்து ஏற்கனவே தனது கடுமையான கண்டனத்தை நடிகை வரலட்சுமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தற்போது நடிகை சிம்ரனும் தனது சமூக வலைப்பக்கத்தில் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

சிம்ரன் இதுகுறித்து, ‘உண்மையில் இந்த செய்தியை படித்தவுடன் எனது நெஞ்சமே நொறுங்கி விட்டது என்றும் இதனை எப்போதும் ஏற்றுக்கொள்ளவே முடியாது என்றும் விலங்குகள் மீதான வன்முறை என்பது மிகவும் கொடுமையானது என்றும் இதனை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த செயலுக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் இது குறித்து சமூக ஆர்வலர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.