அரவிந்தசாமியின் படத்தில் அஜித்-விஜய்யின் ராசியான நடிகை

  • IndiaGlitz, [Wednesday,February 22 2017]

தற்போதைய கோலிவுட்டின் ஹாட் நடிகர் அரவிந்தசாமிதான். 'தனி ஒருவன்', 'போகன்' வெற்றிக்கு பின்னர் அவரது கைவசம் படங்கள் குவிந்து வருகிறது. அந்த வகையில் அவர் ஒப்புக்கொண்ட இன்னுமொரு படம் சமீபத்தில் பூஜை போடப்பட்டது. இயக்குனர் செல்வா இயக்கத்தில் அரவிந்தசாமி, ரித்திகாசிங், நந்திதா ஸ்வேதா நடிக்கும் இந்த படத்தின் டைட்டில் 'வணங்காமுடி' என்று கூறப்பட்டாலும், அது படக்குழுவினர்களால் உறுதி செய்யப்படவில்லை

இந்நிலையில் இந்த படத்தில் அஜித், விஜய் படங்களில் நடித்து ராசியான நடிகை என்ற பெயர் பெற்ற பிரபல நடிகை சிம்ரன் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளாராம். சிம்ரன் இந்த படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும் தம்பி ராமையா, சாந்தினி, ஹாசினி, ஹரிஷ் உத்தமன், ராஜ் கபூர், நாகி நீடு, ரமேஷ் பண்டிட் OAK. சுந்தர் மற்றும் பலர் இந்த படத்தில் நடிக்கவுள்ளனர். கோகுல் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். இந்த படத்தை மேஜிக் பாக்ஸ் நிறுவனத்தின் சார்பில் கணேஷ் தயாரிக்கவுள்ளார்.

More News

ஓபிஎஸ் ஆதரவு நாமக்கல் அதிமுக எம்பிக்கு உற்சாக வரவேற்பு

கடந்த சனிக்கிழமை நடந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்மொழிந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களித்த 11 எம்.எல்.ஏக்களுக்கு ஒருபுறம் மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொருபுறம் ஓபிஎஸ் ஆதரவு எம்பிக்களுக்கும் மக்கள் பெரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர்...

கபாலியுடன் கனெக்சன் ஆகும் சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படமான 'வேலைக்காரன்' பட டைட்டிலை தேர்வு செய்த சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்' படக்குழு தற்போது ரஜினியின் லேட்டஸ்ட் சூப்பர் ஹிட் படமான 'கபாலி' படப்பிடிப்பு நடந்த மலேசியாவை அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கான லொகேஷனாக தேர்வு செய்துள்ளனர்...

சிபிராஜின் அடுத்த பட இயக்குனர் இவர்தான்

'நாய்கள் ஜாக்கிரதை' படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆன சிபிராஜ், அதன்பின்னர் 'ஜாக்சன் துரை' படத்தில் நடித்தார். தற்போது அவர் 'கட்டப்பாவ காணோம்' மற்றும் 'சத்யா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சிபிராஜின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் குறித்த தகவல் வெளிவந்துள்ளது...

பாவனா தொடர்பான வழக்கின் முக்கிய குற்றவாளி கோவையில் பதுங்கலா?

பிரபல நடிகை பாவனா கடந்த வாரம் காரில் சென்று கொண்டிருந்தபோது மர்ம கும்பல் ஒன்று வழிமறித்து அவரை பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கியது

அடக்கி வாசிக்க நினைத்தேன். ஆனால் பேச வைக்கின்றார்கள். கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் நிகழ்வுகள் குறித்து தனது ஆக்கபூர்வமான கருத்துக்கலை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்.