close
Choose your channels

ஸ்பை கேமிரா மூலம் 1400 ஆபாச வீடியோக்கள்: பலே குற்றவாளி கைது

Saturday, June 6, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த பல ஆண்டுகளாக 1,400 க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை ஸ்பை கேமராக்கள் மூலம் எடுத்த பலே குற்றவாளி ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்

சிங்கப்பூரைச் சேர்ந்த 35 வயது நபர் ஒருவர் கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் பல்வேறு இடங்களில் பெண்களின் அந்தரங்க ஆபாச வீடியோக்களை பதிவு செய்துள்ளார். ஸ்பை கேமரா, மொபைல் கேமரா, ஸ்பை கடிகாரம், உள்பட பல்வேறு உபகரணங்கள் மூலம் பேருந்து நிலையம், ரயில் நிலையம்,அலுவலகங்கள், கழிவறைகள் உள்ளிட்ட இடங்களில் பெண்களுக்கு தெரியாமலேயே அவர்களுடைய அந்தரங்கங்களை படம் பிடித்து வீடியோக்களாக வைத்துள்ளார்

இந்த நிலையில் இவர் தனது அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஒருவரை அந்தரங்கமாக வீடியோ எடுத்த போது அந்த பெண்ணால் பிடிபட்டு தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். போலீசார் இதுகுறித்து அவரிடம் விசாரித்த போது ’பொது இடங்களான பேருந்துகள், இரயில் நிலையம், ஆகிய இடங்களில் பெண்களின் அந்தரங்கங்களை படம் பிடித்ததாகவும் குறிப்பாக கழிவறைகளில், குளியலறைகளில், உடைமாற்றும் இடங்கள் உள்ளிட்ட 800க்கும் மேற்பட்ட இடங்களில் பெண்களின் அந்தரங்கங்களை ஆபாசமாக படம் பிடித்ததாகவும் அவர் கூறியுள்ளார்

கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் இந்த அருவருக்கத்தக்க செயலை செய்து வரும் இவர் இதுவரை யாரிடமும் பிடிபடாமல் சுமார் 1400க்கும் மேற்பட்ட வீடியோக்களுக்கு மேல் இந்த நபர் பதிவு செய்திருப்பது போலீசாரையே அதிர வைத்துள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.