போதும்டா சாமி.. எதுக்கு பொண்ணா பொறக்கணும்னு தோனுது: பாடகி சின்மயி வேதனை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரபரப்பு ஒரு பக்கம் இருக்கும் நிலையில் மற்றொரு பக்கம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த செய்திகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அறந்தாங்கி பகுதியில் 7 வயது சிறுமி ஜெயப்பிரியா, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை மட்டுமின்றி நாட்டையே உலுக்கியது. வட இந்திய பிரபலங்களும் இந்த படுகொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழக திரைஉலகினர் பலர் ஜெயப்பிரியாவுக்கு நேர்ந்த கொடுமைக்கு குரல் கொடுத்தனர். அவர்களில் ஒருவர் பாடகி சின்மயி என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ஜெயப்பிரியாவின் கொடூரம் குறித்த அதிர்ச்சியிலிருந்து மக்கள் மீள்வதற்குள் தற்போது சசிகலா என்ற பெண்ணை இரண்டு சகோதரர்கள் குளிக்கும்போது ஆபாசபடம் எடுத்து அவரை மிரட்டி கடந்த 4 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்துவந்தனர். ஒரு கட்டத்தில் அவர்கள் எல்லை மீறியதால் அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் ஜெயப்பிரியா கொலையை அடுத்து சசிகலா கொலைக்கும் நீதி வேண்டும் என சமூக வலைதளங்களில் திரையுலக பிரபலங்கள், நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர் என்பதும், அதற்கான ஹேஷ்டேகும் ட்ரெண்டிங்கில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த ஹேஷ்டேக்கை தனது டுவிட்டரில் பதிவு செய்த பாடகி சின்மயி, ‘போதும்டா சாமி! எதுக்கு பொண்ணா பொறக்குரோம்ன்னு தோணுது’ என்று மிகவும் வேதனையுடன் பதிவு செய்துள்ளார். இதற்கு ஒரு நெட்டிசன் ’உங்களைப்போல தைரியசாலிகள் உருவாக வேண்டும்’ என்று கூறியதற்கு ’உருவாகும் முன்னே கொன்னுறாங்களே’ என்று விரக்தியுடன் பதிலளித்துள்ளார். பாடகி சின்மயின் இந்த ட்விட்டர் பதிவுகள் தற்போது வைரலாகி வருகிறது.

More News

ரஞ்சி டிராபியில் அதிக ரன்களை குவித்தேன்... ஆனால் என்னை ஒதுக்கிட்டாங்க... குற்றம் சாட்டிய முக்கிய வீரர்!!!

ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்து சாதனை படைத்த வாசிம் ஜாஃபர் தற்போது அதிர்ச்சி தரும் ஒரு தகவலை தெரிவித்து இருக்கிறார்

கொத்துக் கொத்தாகச் செத்து மடியும் யானைகள்: விஞ்ஞானிகள் எதிர்கொள்ளும் புது சிக்கல்!!!

தென் ஆப்பிரிக்கா நாடான போட்ஸ்வானஸ் இல் தற்போது ஒரு புது சிக்கல் வெடித்து இருக்கிறது

ரணகளத்திலும் குதூகலம் கேக்குது... 2.89 லட்சம் மதிப்பிலான கொரோனா மாஸ்க்!!! ஆச்சர்யப்பட்ட மக்கள்!!!

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க மக்கள் கடும் யுத்தத்தையே நடத்த வேண்டியிருக்கிறது

திரைப்படமாகிறது 'கால்வான்' பள்ளத்தாக்கு மோதல்: பிரபல நடிகர் தயாரிக்கின்றார்!

சமீபத்தில் இந்திய சீன எல்லையான 'கால்வான்' பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்கள் பயங்கரமாக மோதிக் கொண்டதில் 20 இந்திய ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தனர்.

கமல்ஹாசனின் திட்டத்திற்கு ஆதரவு கொடுத்த ஜிவி பிரகாஷ்!

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சென்னையில் கொரோனா வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை