close
Choose your channels

மேடையில் பாடிக்கொண்டிருந்தபோது திடீரென உயிரிழந்த பாடகர்: திரையுலகினர் இரங்கல் 

Sunday, May 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பின்னணி பாடகர் ஒருவர் இசை நிகழ்ச்சி ஒன்றில் நேரலையில் பாடிக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிரபல மலையாள பின்னணி பாடகர் எடவா பஷீர், பாடகர் கேஜேஜேசுதாஸின் பாடல்களை கேட்டு பாடகர் ஆனார். இந்த நிலையில் இசை நிகழ்ச்சி ஒன்றில் அவர் ஜேசுதாஸின் பாடலை மெய்மறந்து பாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.

இதனையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்து அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதனால் திரையுலகினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  மறைந்த பின்னணி பாடகர் எடவா பஷீருக்கு வயது 78.

ப்ளூ டயமண்ட் என்ற இசைக்குழுவின் பொன்விழா ஆண்டையொட்டி கேரள மாநிலம் ஆலப்புழாவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற போது தான் இந்த சோக நிகழ்வு நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

பாடகர் எடவா பஷீர் மறைவிற்கு திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மறைந்த பாடகர் எடவா பஷீரின் உடல் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.