close
Choose your channels

கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பிய பிரபல பாடகி

Monday, April 6, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூர் சமீபத்தில் லண்டனில் இருந்து திரும்பி வந்த போது விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனையில் இருந்து தப்பி, வீட்டிற்கு சென்றதாகவும் அதன் பின்னர் அவர் ஒரு விருந்தில் கலந்து கொண்டதாகவும் அந்த விருந்தில் மத்திய அமைச்சர்கள் உள்பட பலர் கலந்து கொண்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென கனிகா கபூருக்கு கொரோனா பாசிட்டிவ் என உறுதி செய்யப்பட்டதால் அவர் கலந்து கொண்ட விருந்தில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் உள்பட 50க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக லக்னோ சஞ்சய் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கனிகா கபூருக்கு அடுத்தடுத்து நான்கு முறை கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டதில் நான்கு முறையும் பாசிட்டிவ் என ரிசல்ட்டுகள் வந்தன.

ஆனால் நேற்று ஐந்தாவது முறையாக பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு நெகட்டிவ் என ரிசல்ட் வந்தது. இருப்பினும் இரண்டு முறை பரிசோதனையில் நெகட்டிவ் வந்தால் மட்டுமே டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவர்கள் அறிவித்தனர். இந்த நிலையில் இன்று ஆறாவது முறையாக அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் மீண்டும் நெகட்டிவ் வந்ததால் கனிகா கபூர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos