close
Choose your channels

பிரபல பாடகரின் ஸ்டூடியோவில் மர்மமாக மரணமடைந்த இளம்பெண்: பரபரப்பு தகவல் 

Monday, February 24, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மும்பையைச் சேர்ந்த பிரபல பாடகர் மிகா சிங் என்பவருக்கு மும்பை அந்தேரியில் சொந்தமாக ஸ்டுடியோ ஒன்று உள்ளது. இந்த ஸ்டூடியோவின் மேனேஜராக இளம்பெண் சௌமியா என்பவர் கவனித்து வந்ததோடு அங்கேயே தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இளம்பெண் செளமியா பேச்சுமூச்சின்றி இருந்ததை பார்த்த ஊழியர்கள் உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்து அவர் இறந்து பல மணி நேரம் ஆகி விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் சௌமியா கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும், இதனை அடுத்து அவர் தூக்க மாத்திரை அதிக அளவில் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் சௌமியா தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

சௌமியா இறந்த ஸ்டூடியோவின் சொந்தக்காரரான பாடகர் மிகா சிங் ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர் என்பதும் பிரபல நடிகை ராக்கி சாவந்துக்கு முத்தம் கொடுத்தது உள்பட பல சர்ச்சைகளில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.