close
Choose your channels

படுக்கையை பகிர்ந்தால் தான் பாட வாய்ப்பு: இயக்குனர் மீது பாடகி பாலியல் புகார்!

Wednesday, May 15, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாட வாய்ப்பு வேண்டும் என்றால் படுக்கையை பகிர வேண்டும் என்று முன்னணி இயக்குனர் ஒருவர் நிர்ப்பந்தம் செய்ததாக பிரபல பாடகி ஒருவர் திடுக்கிடும் புகார் ஒன்றை கூறியுள்ளார்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி பாடகிகளில் ஒருவர் பிரணவி ஆச்சார்யா. இவர் ஆரம்பகாலத்தில் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தபோது பிரபல இயக்குனர் ஒருவர் தன்னுடைய படத்தில் பாட வாய்ப்பு தருவதாக கூறி அழைத்துள்ளார். பின்னர் தன்னுடைய படுக்கையை பகிர்ந்தால் பாட வாய்ப்பு தருவதாக நிர்ப்பந்தம் செய்ததாகவும், ஆனால் தான் இதற்கு மறுத்துவிட்டதாகவும், அதனையும் மீறி தன்னிடம் தவறாக நடக்க அந்த இயக்குனர் முயற்சித்தபோது 'கிட்டே நெருங்கினால் செருப்பால் அடிப்பேன்' என்று கூறியதும் அந்த் இயக்குனர் விலகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பேட்டி தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே நடிகை ஸ்ரீரெட்டி பிரபல இயக்குனர்கள், நடிகர்கள் மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டின் பரபரப்பே இன்னும் நீடித்துவரும் நிலையில் தற்போது பாடகி ஒருவரும் அதே பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.