close
Choose your channels

நீயா நானா? என போட்டி போடுவோம்: எஸ்பிபி குறித்து எஸ்.ஜானகி

Monday, September 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் சமீபத்தில் மரணமடைந்த நிலையில் அவரது நினைவலைகள் குறித்து பல பிரமுகர்கள் தங்களது சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் எஸ்பிபி உடன் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகிஅவர்கள் தனது அனுபவங்களை கூறியுள்ளார். அவர் கூறியதாவது:

முதல் முதலாக நான் ஆந்திராவில் குண்டூர் அருகே உள்ள ஒரு பள்ளியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு அளிப்பதற்காக சென்று இருந்தேன். அப்போது தான் அங்கு சுப்பிரமணியனை நான் முதன்முதலாகப் பார்த்தேன். எஸ்பிபியை நான் சுப்பிரமணியன் என்றுதான் அழைப்பேன். அப்போது பரிசு வாங்க வந்தவர்களில் ஒருவர்தான் எஸ்பிபி. அவர் ஒரு பாடலை அந்த மேடையில் பாடிய போது அவருடைய பாடலை நான் பாராட்டி நீ சினிமாவுக்கு வந்தால் மிகப் பெரிய ஆளாக வருவார் என்று கூறிய அவருக்கு வாழ்த்து கூறினேன்

அதன் பிறகு அவர் சென்னை வந்து அவருடைய திறமையாலும் அதிர்ஷ்டத்தாலும், குரல் வளத்தாலும் அவர் முன்னுக்கு வந்தார். ஆனாலும் அவர் ஒவ்வொரு மேடையிலும் ஜானகி அம்மா தான் என்னை சினிமாவுக்குக் கொண்டு வந்தார் என்று கூறுவார். அது உண்மை கிடையாது. நான் எல்லோருக்கும் சொல்வதைப் போலவே அவருக்கும் சொன்னேன். அவருடைய திறமை, அதிர்ஷ்டம், குரல் வளம் ஆகியவற்றால் அவர் முன்னுக்கு வந்தார்

மேலும் நாங்கள் இருவரும் இணைந்து ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளோம். எத்தனை பாடல்கள் பாடினோம் என்று எங்களுக்கே தெரியாது. கிட்டத்தட்ட தினமும் அவருடன் எனக்கு ரிக்கார்டிங் இருக்கும். தமிழ் உள்பட பல மொழிகளில் அவருடன் ஏதாவது ஒரு பாடலை தினமும் பாடிக் கொண்டிருந்தேன். ரெக்கார்டிங் தியேட்டரில் நாங்கள் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு பாடுவோம். இசையை அவ்வளவு ரசிப்போம். உணர்ந்து பாடுவோம்’ என்று ஜானகி தனது நினைவலைகளை கூறியுள்ளார்

மேலும் ’எஸ்பிபி அவர்கள் எனது சக பாடகர் மட்டுமன்றி எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே இருந்தார். அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவார், சாப்பிடுவார், பாடல்களை கேட்பார். அவரது இழப்பு எனக்கு மிகப்பெரிய இழப்பாக உள்ளது. அவரது ஆத்மா சாந்தி அடையவும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கிடைக்கவும் நான் இறைவனை வேண்டுகிறேன்’ என்று எஸ்.ஜானகி கூறியுள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.