close
Choose your channels

சில நாட்களுக்கு முன் பிறந்த மகனை அறிமுகம் செய்த ஸ்ரேயா கோஷல்: வைரல் புகைப்படம்

Wednesday, June 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் உள்பட பல மொழிகளில் திரைப்பட பாடல்களை பாடிய பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆண் குழந்தை பிறந்தது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது ஸ்ரேயா கோஷல் தனது குழந்தையை இன்ஸ்டாகிராமில் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு தொழிலதிபர் ஷைலாதித்யா முகோபாத்யா என்பவரை திருமணம் செய்து கொண்ட ஸ்ரேயா கோஷல் ஐந்து ஆண்டுகளுக்குப் பின் கடந்த சில மாதங்களுக்கு முன் கர்ப்பமானார். அவருக்கு மே 22ஆம் தேதி அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்த தகவலை தனது இன்ஸ்டாகிராமில் அவர் தெரிவித்திருந்தார் என்பதும் கடவுள் அருளால் விலைமதிப்பற்ற ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும், இது போன்ற மகிழ்ச்சியான தருணத்தை தான் எதிர்கொண்டது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் தனது மகன் மற்றும் கணவர் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ள ஸ்ரேயா கோஷல், தேவ்யான் முகோபாத்யாவை அறிமுகப்படுத்துவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும், கடந்த 22ஆம் தேதி எங்கள் குடும்பத்திற்கு வந்த அவர் எங்களுடைய வாழ்க்கை முறையையே மாற்றி விட்டார் என்றும் கூறியுள்ளார். அவர் பிறந்தவுடன் பார்த்த முதல் பார்வையிலேயே அவர் எங்களது இதயங்களை அன்பால் நிரப்பினார் என்றும் ஒரு தாய் மற்றும் தந்தையால் மட்டுமே தங்கள் குழந்தையை உணர முடியும் என்பதை தான் புரிந்து கொண்டதாகவும் தூய்மையான அன்பு தனக்கு கிடைத்துள்ளது மிகப்பெரிய வரம் என்றும் இதை ஒரு கனவு போல் உணர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.