இரண்டாவது திருமணம் செய்யும் பிரபல பாடகி: தொழிலதிபர் மாப்பிள்ளை!

  • IndiaGlitz, [Monday,December 07 2020]

பிரபல தமிழ் தெலுங்கு திரைப்பட பாடகி இரண்டாவது திருமணம் செய்து கொள்வதாக அறிவித்துள்ளார். அவரை திருமணம் செய்து கொள்வது ஒரு தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது

தெலுங்கு திரையுலகில் ஏராளமாக பாடல்களை பாடியவர் சுனிதா. இவர் தமிழிலும் இளையராஜா இசையில் சில பாடல்களை பாடியுள்ளார் என்பதும் படங்களில் பாடுவது மட்டுமின்றி நடிகைகளுக்கு டப்பிங் பேசி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் 19 வயதிலேயே திருமணம் செய்து கொண்ட சுனிதாவுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பதும் மகள் ஸ்ரேயாவும் பாடகியாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே பாடகி சுனிதா இரண்டாவது திருமணம் செய்ய இருப்பதாக தெலுங்கு திரையுலகில் வதந்திகள் பரவியது. ஆனால் இந்த வதந்திகளை அவர் கண்டு கொள்ளாமல் அவ்வப்போது மறுத்து வந்தார். இந்த நிலையில் தற்போது அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தொழிலதிபர் ராம் தான் தனக்கு கணவராக வரப்போகிறவர் என்றும் அவர் பதிவு செய்துள்ளார் அந்த பதிவில், ‘ஒவ்வொரு தாயும் தன் குழந்தைகளை நன்றாக வளர்க்க வேண்டும், வாழ்க்கையில் செட்டில் செய்ய வேண்டும் என்று தான் கனவு காண்பார்கள். நானும் அது போன்று தான் கனவு இருக்கின்றேன். ஆனால் அதேநேரத்தில் அற்புதமான சிந்தனை கொண்ட குழந்தைகளை நான் கொண்டிருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். தற்போது ஒரு முக்கிய தருணம் வந்து விட்டது. என் வாழ்க்கையில் அற்புதமான நண்பராகவும் சிறந்த பார்ட்னராக ராம் அவர்கள் நுழைந்துள்ளார். நாங்கள் விரைவில் திருமணம் செய்ய உள்ளோம். எங்களுடைய என்னுடைய நலம் விரும்பிகள் அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்

இதனை அடுத்து சுனிதாவின் இரண்டாவது திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

More News

சாதி வாரி கணக்கெடுப்புக்கு ஆணையம்… முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் விரைவான நடவடிக்கை!!!

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பிற்காக ஓய்வுப்பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு உள்ளது.

உனக்காவது ஷிவானி இருக்கா? எனக்கு யார் இருக்கா? பாலாஜியிடம் புலம்பிய ஆரி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில வாரங்களாக அர்ச்சனாவின் அன்பு குரூப்பை எதிர்ப்பவர்கள் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். சுசித்ரா, சம்யுக்தா மற்றும் சனம்

நாளை நாடு தழுவிய போராட்டம்… தமிழகத்தில் பஸ், ரயில்கள் இயக்கப்படுமா???

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் விவசாயிகள் கடும் போராட்டத்தில் குதித்து உள்ளனர்.

இதைவிட எனக்கு வேற என்ன வேணும்: வெளியேறிய பின் சனம்ஷெட்டியின் நெகிழ்ச்சியான டுவீட்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று சனம்ஷெட்டி வெளியேற்றப்பட்டதை பல பிக்பாஸ் ரசிகர்கள் இன்னும் ஜீரணிக்க முடியாமல் உள்ளனர். பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விமர்சனம்

ஓடிடியில் 'மாஸ்டர்' படம் வெளியிட முடிவு செய்தால்..... அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படம் வரும் பொங்கல் விருந்தாக ஜனவரி 13ஆம் தேதி