close
Choose your channels

கொரானாவால் பாதிக்கப்பட்டும் பாட்டு பாடி உற்சாகமாக இருக்கும் 'விஸ்வாசம்' புகழ் பாடகர்!

Wednesday, September 30, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை என்ற பகுதியைச் சேர்ந்த திருமூர்த்தி என்றா மாற்றுத்திறனாளி பாடகர் ‘விஸ்வாசம்’ படத்தில் இடம்பெற்ற ’கண்ணான கண்ணே’ என்ற பாடலை தத்ரூபமாக பாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதனை அடுத்து இந்த படத்தின் இசையமைப்பாளர் டி இமான், திருமூர்த்தியை தொடர்பு கொண்டு தனது படத்தில் பாட வாய்ப்பு கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் தற்போது திரையுலகில் ஒரு சில படங்களில் திருமூர்த்தி பாடி வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருமூர்த்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த போதிலும் அங்கும் அவர் கொரோனா வார்டில் உற்சாகமாக பாடல்களை பாடி வருகிறார். கொரோனா வார்டில் உள்ள வாட்டர்கேன் மற்றும் பல் துலக்கப் பயன்படுத்தும் பிரஷ் ஆகியவற்றை வைத்து அவரே இசையமைத்து பாட்டு பாடி அசத்தி வருகிறார். அதனை கொரோனா வார்டில் உள்ள கொரோனா நோயாளிகள் உற்சாகமாக அவர் பாடுவதை கைதட்டி வரவேற்று வருகின்றனர்.

மேலும் சமீபத்தில் எஸ்பிபி அவர்கள் காலமான செய்தியை அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்த திருமூர்த்தி, எஸ்பிபி பாடல்களையும் பாடி அதற்கு விளக்கம் அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. திருமூர்த்தியின் பாடலை கேட்டு கொரோனா நோயாளிகள் தங்களுக்கு இருக்கும் நோய்களை மறந்து உற்சாகமாக அவருடன் சேர்ந்து பாடி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos