பாடகர் உன்னிகிருஷ்ணன் மனைவி யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படங்கள்

  • IndiaGlitz, [Wednesday,December 08 2021]

பிரபல பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணனின் மனைவி புகைப்படம் தற்போது இணையதளங்களில் திடீரென வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் பிரபல பாடகர்களில் ஒருவர் உன்னிகிருஷ்ணன் என்பதும் இவர் இயக்குனர் ஷங்கர் இயக்கிய ’காதலன்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ’என்னவளே அடி என்னவளே’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் பாடலிலேயே சிறந்த பாடகருக்கான தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பின்னர் பல பாடல்களை உன்னிகிருஷ்ணன் பாடியுள்ளார் என்பதும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,கன்னடம் மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 1994ஆம் ஆண்டு பிரியா என்பவரை உன்னிகிருஷ்ணன் திருமணம் செய்து கொண்டார். உன்னிகிருஷ்ணன் மனைவி பிரியா பரதநாட்டிய கலைஞர் மற்றும் மோகினி நடன கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தம்பதிக்கு வாசுதேவ் கிருஷ்ணா மற்றும் உத்ரா ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பதும் தற்போது உத்ரா ஒரு சில திரைப்படங்களில் பாடி வருகிறார் என்பதும் வாசுதேவ் ஒரு கிரிக்கெட் வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாடகர் உன்னிகிருஷ்ணனின் மகள் மற்றும் மகன் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தாலும் உன்னிகிருஷ்ணன் மனைவி புகைப்படம் தற்போது தான் முதல் முதலாக இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை உன்னி கிருஷ்ணன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

More News

சாப்பாட்டில் கணக்கு பார்த்த பிரியங்கா: கடுப்பான சிபி கூறியது என்ன தெரியுமா?

எல்லாருக்கும் சாப்பாடு இருக்குமா? என்பதை பார்த்துவிட்டு சாப்பிட வேண்டும் என பிரியங்கா கூறியதற்கு சிபி கண்டித்த சம்பவம் இன்றைய புரமோ வீடியோவில் உள்ளன. 

கிச்சடியில் போதை மருந்து கலந்து, பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் 17 பள்ளி மாணவிகளுக்கு உணவில் போதை மருந்து கலந்து கொடுத்து அவர்கள் பயிலும் பள்ளிகளின்

தற்கொலை மெஷினுக்கு அங்கீகாரம் கொடுத்த அரசு… பகீர் தகவல்!

தற்கொலை செய்துகொள்வதே கோழைத்தனம், அது சட்டத்திற்கு எதிரானது எனப் பல்வேறு நாடுகளில் சட்டம் வகுக்கப்பட்டு இருக்கிறது.

நீலக் கடலுக்கு நடுவே நீச்சல் உடையில் பிரபல நடிகை… வைரலாகும் புகைப்படம்!

தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் கவனம் ஈர்த்த நடிகையாக வலம்வருபவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் நடிகர்

திரையரங்குகளில் வெளியாகும் 'சூரரைப்போற்று': முன்பதிவுகள் ஆரம்பம்!

பொதுவாக ஓடிடியில் நேரடியாக ரிலீஸான திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியிட ஓடிடி நிறுவனம் சம்மதிக்காது என்பதும், திரையரங்கு உரிமையாளர்களும் அந்த படத்தை வெளியிட மாட்டார்கள் என்பதும் தெரிந்ததே