close
Choose your channels

பாடகர் உன்னிகிருஷ்ணனுக்கு இவ்வளவு பெரிய மகளா? மனைவியுடன் கங்கைக்கரையில் புகைப்படம்!

Tuesday, August 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாடகர் உன்னி கிருஷ்ணன் தனது மகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பாடகர் உன்னிகிருஷ்ணனுக்கு இவ்வளவு பெரிய மகளா? என ஆச்சிரியத்தில் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் ஏஆர் ரகுமான் இசையமைத்த ’காதலன்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ‘என்னவளே’ என்ற பாடலின் மூலம் பாடகராக அறிமுகமானவர் உன்னிகிருஷ்ணன். முதல் பாடலுக்கே அவருக்கு சிறந்த பாடகர் என்ற தேசிய விருது கிடைத்தது. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 4 ஆயிரம் பாடல்களுக்கும் அதிகமாக பாடியுள்ளார்.

இந்த நிலையில் பாடகர் உன்னிகிருஷ்ணன் கடந்த 1994 ஆம் ஆண்டு பரதநாட்டிய கலைஞர் பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு வாசுதேவ் கிருஷ்ணா என்ற மகனும், உத்தாரா என்ற மகளும் உள்ளனர், உன்னிகிருஷ்ணன் மகள் உத்தாரா, ஏ.எல்.விஜய் இயக்கிய ’சைவம்’ படத்தில் ’அழகு’ என்ற பாடலை பாடினார் என்பதும் இதற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. உன்னிகிருஷ்ணன் மற்றும் அவரது மகள் உத்தாரா ஆகிய இருவருமே அறிமுகமான முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றனர். மேலும் பிசாசு, தெறி, லட்சுமி உள்பட ஒருசில படங்களுக்கும் உத்தாரா பாடல் பாடியுள்ளார்.

இந்த நிலையில் பாடகர் உன்னி கிருஷ்ணன் தனது மகள் உத்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பாடகர் உன்னிகிருஷ்ணனுக்கு இவ்வளவு பெரிய மகளா என்று ஆச்சரியத்தில் கமெண்ட்ஸ்களை பதிவாகி வருகின்றனர். மேலும் பாடகர் உன்னிகிருஷ்ணன் தனது மனைவியுடன் கங்கைக்கரையில் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படமும் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.