'சிறகடிக்க ஆசை' சீரியலில் இருந்து இந்த நடிகை விலகுகிறாரா? என்ன காரணம்?

  • IndiaGlitz, [Wednesday,February 28 2024]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ என்ற சீரியல் விறுவிறுப்பாகவும் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வரும் நிலையில் இந்த சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகை திடீரென இந்த சீரியலில் இருந்து விலக போகிறார் என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ என்ற சீரியல் கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் ஒரு வருடத்திற்கு மேல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த சீரியலில் முத்து மீனா கேரக்டரில் வெற்றி வசந்த் மற்றும் மீனா கேரக்டரில் கோமதி பிரியா நடித்து வருகின்றனர் என்பதும் இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன், அண்ணாமலை என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்தது மேலும் இந்த சீரியலில் உள்ள அனைத்து கேரக்டர்களுக்குமே முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இந்த சீரியல் உருவாக்கப்பட்டு வருகிறது என்பதும் விகடன் கதை குழுவினர்களின் விறுவிறுப்பான கதையில் குமரன் என்பவர் இந்த சீரியலை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த சீரியலில் மீனா, ரோகிணி மற்றும் ஸ்ருதி ஆகிய மூன்று முக்கிய பெண் கேரக்டர்களில் கோமதி பிரியா, சல்மா அருண் மற்றும் ப்ரீத்தா ரெட்டி ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் ஸ்ருதி கேரக்டரில் நடித்து வரும் பிரீத்தா ரெட்டி ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’இனியா’ என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இரண்டு சீரியல்களிலும் மாறி மாறி நடிப்பது அவருக்கு சிரமமாக இருப்பதாகவும் எனவே ஏதாவது ஒரு சீரியலில் இருந்து அவர் விலக போவதாகவும் கூறப்படுகிறது.

அவர் ’இனியா’ சீரியலை கைவிடப் போகிறாரா? அல்லது ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் இருந்து விலக போகிறாரா என்பதை விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

More News

அந்த விபத்தில் என்ன தான் நடந்தது? 'எதிர்நீச்சல்' மதுமிதா வெளியிட்ட வீடியோ..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'எதிர்நீச்சல்' சீரியலில் நடித்து வரும் நடிகை மதுமிதாவின் கார், காவல்துறையை சேர்ந்த ஒருவரின் பைக்கின் மீது மோதியதாகவும் அந்த காவல்துறை அதிகாரிக்கு

நடிகர் சரத்குமாரின் முதல் மனைவி சினிமாவில் நடிக்கிறாரா? அதுவும் தேசிய விருது பெற்ற இயக்குனர் படத்தில்?

நடிகர் சரத்குமாரின் முதல் மனைவி சாயா சிங் தேசிய விருது பெற்ற இயக்குனரின் திரைப்படத்தில் நடித்து வருவதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொழில் செய்யும் இடத்தில் அதிர்ஷ்டம் பெருக சின்னங்கள் மற்றும் படங்கள்!

உங்கள் ராசிக்கேற்ப அதிர்ஷ்டத்தை வரவழைக்கும் சின்னங்கள் மற்றும் படங்களை தொழில் செய்யும் இடத்தில் வைப்பதன் மூலம் வெற்றி, வளம் மற்றும் மகிழ்ச்சியை பெறலாம்.

மக்களவை தேர்தல் 2024: சமீபத்தில் கட்சி தொடங்கிய தமிழ் நடிகர் போட்டியிடும் தொகுதி அறிவிப்பு..!

தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த தேர்தலில் ஏற்கனவே ஒரு சில திரை உலகை சேர்ந்த

பெரிய ஸ்டார் இல்லை.. பெரிய பட்ஜெட் இல்லை.. 50 கோடிக்கும் மேல் சம்பாதிக்கும் மலையாள திரைப்படங்கள்..!

மலையாள திரையுலகில் மோகன்லால், மம்முட்டி போன்ற சூப்பர் ஸ்டார்கள் இருந்தாலும் அங்கு கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் அதன் பிறகுதான் ஹீரோ, ஹீரோயின்