'சிறகடிக்க ஆசை' சீரியலா? சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியா? ஒரே பாட்டும் கும்மாளமும் ஜாலி..!

  • IndiaGlitz, [Tuesday,March 12 2024]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியல் பார்வையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த சீரியலின் இன்றைய எபிசோடு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி போல், சீரியலின் கேரக்டர் ஒவ்வொருவராக மாறி மாறி பாட்டு பாடும் காட்சிகள் உள்ளதை ஜாலியாக பார்த்து ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

ஒரு திருமண விழாவிற்காக 500 மாலைகள் ஆர்டர் வாங்கி வந்த முத்து அதை தனது மனைவி மீனாவிடம் கூற, மீனா உடனே அவர் தனது சக மாலை கட்டும் நபர்களுடன் சேர்ந்து 500 மாலைகளை கட்ட தொடங்கியுள்ளார். இந்த நிலையில் தொடர்ச்சியாக மாலை கட்டிக் கொண்டிருக்கும் நிலையில் சிலருக்கு அலுப்பு தட்ட உடனே ஸ்ருதி, பாட்டு பாடிக்கொண்டே வேலை செய்தால் சோர்வு தெரியாது என்று ஐடியா கொடுக்கிறார்.

இதனை அடுத்து ஒவ்வொருவராக பாட்டு பாடுகின்றனர். ’மல்லிகை என் மன்னன் மயங்க’ என்ற பாடலை என் மீனாவும், ‘ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ’ என்ற பாடலை முத்துவும் பாடுகின்றனர். இதனை அடுத்த ’ஊதா ஊதா ஊதாப்பு’ என்ற பாடலை ரவி பாடிக் கொண்டே ஸ்ருதியுடன் நடனமாட அதை பார்த்து அனைவரும் ரசிக்கின்றனர்.

இதனை அடுத்து அண்ணாமலை ’பூ மாலையில் ஒரு மல்லிகை' என்று பாட்டை பாட, விஜயா ’மல்லிகைப்பூ வச்சு வச்சு’ என்ற பாட்டை பாடுகிறார். இன்றைய எபிசோடை பார்த்த பார்வையாளர்கள் இது ’சிறகடிக்க ஆசை சீரியலா? அல்லது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியா? என்று கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கஷ்டப்பட்டு கட்டிய 500 மாலையை சிட்டி திருடி விட்டதாகவும் அதனால் அதிர்ச்சி அடையும் முத்து அடுத்து என்ன செய்ய போகிறார் என்பதுதான் நாளைய எபிசோடு என்று இன்றைய எபிசோடின் இறுதியில் காண்பிக்கப்படுகிறது.

More News

'தக்லைஃப்' படத்தில் துல்கர் சல்மானுக்கு பதில் இந்த மாஸ் நடிகரா? மணிரத்னம் வேற லெவல் திட்டம்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'தக்லைஃப்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்திலிருந்து துல்கர் சல்மான் சமீபத்தில்

தளபதி விஜய்யின் முதல் அரசியல் அறிக்கை.. பாஜக, திமுகவுக்கு எதிரான கருத்தா?

தளபதி விஜய் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் இந்த கட்சிகள் இரண்டே நாட்களில் 50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்து விட்டதாக கூறப்படுகிறது.

48 நாட்கள் கிரக யுத்தம்: மார்ச் 16 முதல் ஏப்ரல் 30 வரை என்ன நடக்கும்?

ஆன்மீக Glitz என்ற யூடியூப் சேனலில் வெளியான வீடியோவில், ஸ்ரீ வராகி தாம்பரம் ஈசநேசன் சாமிகள் மார்ச் 16 முதல் ஏப்ரல் 30 வரை 45 நாட்கள் நடக்கவிருக்கும் கிரக யுத்தம் குறித்துப் பேசுகிறார்.

கமல்ஹாசனை அடுத்து தளபதி விஜய் செய்த தரமான செயல்.. திரையுலக பிரபலங்கள் பாராட்டு..!

உலகநாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கிய நிலையில் அடுத்ததாக தளபதி விஜய்யும் ஒரு கோடி ரூபாய் வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒரே இடத்தில் ஷூட்டிங்.. 2 படங்களிலும் ஒரே நாயகி.. ஜெயம் ரவி - கார்த்தி  ஆச்சரிய சந்திப்பு..!

ஜெயம் ரவி மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் ஒரே இடத்தில், ஒரே படப்பிடிப்பு தளத்திற்கு வந்தபோது சந்தித்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.