close
Choose your channels

ஒரே மணமேடையில் அக்கா-தங்கைக்கு தாலி கட்டிய வாலிபர்! மணமகள்கள் வீட்டார் மகிழ்ச்சி!

Monday, May 17, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வாலிபர் ஒருவர் ஒரே மேடையில் அக்கா தங்கை ஆகிய இருவருக்கும் தாலிகட்டி மனைவிகளாக ஏற்றுக்கொண்டதை அடுத்து அந்த மணமகள்களின் வீட்டார் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோலார் மாவட்டத்தை சேர்ந்த உமாபதி என்பவருக்கும் லலிதா என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இவர்களது திருமணம் நேற்று நடக்க இருந்த நிலையில் திடீரென எனது அக்காவையும் நீங்களே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் அவ்வாறு திருமணம் செய்து கொள்ளாவிட்டால் இந்த திருமணத்திற்கு நான் சம்மதிக்க மாட்டேன் என்றும் லலிதா நிபந்தனை விதித்தார். இதனால் உமாபதி அதிர்ச்சி அடைந்தார்.

தனது அக்கா மாற்றுத்திறனாளி என்பதால் அவரை யாரும் திருமணம் செய்ய மாட்டேன் என்கிறார்கள் என்றும் அதனால் எங்கள் இருவரையும் நீங்களே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் உமாபதியிடம் லலிதா வேண்டுகோள் விடுத்தார். இதனையடுத்து உமாபதி சம்மதம் தெரிவித்ததை அடுத்து இருவருக்கும் ஒரே மணமேடையில் உமாபதி தாலி கட்டினார். இந்த திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் புதுமண தம்பதிகளை வாழ்த்தினர்.

மாற்றுத்திறனாளி அக்காவுக்காக தனது திருமண வாழ்க்கையில் பங்கு கொடுத்த லலிதாவுக்கு ஒரு பக்கம் பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் ஒரே மணமேடையில் வாலிபர் ஒருவர் இரு பெண்களுக்கு தாலிகட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தங்களது மாற்றுத்திறனாளி மகளுக்கு திருமணம் ஆனதை அடுத்து மணமகள் வீட்டாரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.