close
Choose your channels

தூக்கு மாட்டிக் கொள்வது போல் செல்பி எடுத்த வாலிபர்: திடீரென நேர்ந்த விபரீதம் 

Sunday, September 13, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் தூக்கு மாட்டிக் கொள்வது போல் செல்பி எடுக்க முயன்ற நிலையில் எதிர்பாராதவிதமாக தூக்கில் தொங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் பொம்மிநாயக்கன்பட்டி என்ற பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான திரவியம் என்பவர் சிவகங்கை மாவட்டத்திலுள்ள தேவகோட்டையில் தனது உறவினர் வீட்டில் தங்கி ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் செல்பி மோகம் அதிகம் உள்ள திரவியம், நேற்று காலை வேலைக்கு செல்வதற்கு முன்னர் தனது அறையில் செல்பி எடுக்க முயன்றார். தூக்கில் தொங்குவது போன்று வித்தியாசமாக செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்ய வேண்டும் என விரும்பி அதற்கான ஏற்பாடு செய்து செல்பி எடுத்துக் கொண்டிருந்தார்.

முதல் இரண்டு செல்பிகளை எடுத்து விட்டு மூன்றாவது செல்பி எடுக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக தூக்கு கயிறு அவரது கழுத்தை இறுக்கியது. இதிலிருந்து அவர் மீண்டு வர முடியாமல் பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

செல்பி மோகத்தால் ஏற்கனவே பல இளைஞர்கள் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos