சிவாஜி மகள்கள் தொடர்ந்த வழக்கு: சாந்தி தியேட்டரும் வழக்கில் இணைப்பா?

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மகள்கள் சொத்துக்கள் குறித்து தொடர்ந்த வழக்கில் சாந்தி தியேட்டரையும் இணைக்க புதிய மனு கொடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகள்கள் சாந்தி மற்றும் ராஜ்வி ஆகிய இருவரும் சமீபத்தில் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் பிரபு மற்றும் ராம்குமார் ஆகிய இருவரும் சொத்தில் தங்களுக்கு பங்கு கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாகவும் சொத்துக்களை உரிய முறையில் பிரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் தற்போது சாந்தி தியேட்டர் பங்குகள் மற்றும் அதன் சொத்துக்களை விற்பனை செய்யும் நடவடிக்கையில் பிரபு மற்றும் ராம்குமார் ஈடுபட்டுள்ளதாகவும், அந்த சொத்தை விற்பதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது சாந்தி மற்றும் ராஜ்வி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சாந்தி திரையரங்கு வளாகத்தை விற்பனை செய்யும் நடவடிக்கையில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம், பிரபு மற்றும் ராம்குமார் ஈடுபடுவதாகவும் இந்த வழக்கு முடியும் வரை விற்பனைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் வாதாடினார்.

ஆனால் பிரபு மற்றும் ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் சாந்தி தியேட்டர் விற்பனை நடைமுறைகள் ஏற்கனவே முடிந்துவிட்டது என்றும் அதன் பிறகுதான் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக கூறினார்.

அதேபோல் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் 2010 ஆம் ஆண்டிலேயே சாந்தி தியேட்டர் பங்குகள் முழுவதும் கைமாறிவிட்டதாகவும் கட்டுமான பணிகள் முடிந்த பிறகு தற்போது வழக்குப் பதிவு செய்திருப்பதால் விற்பனை செய்ய முடியாத நிலையில் இருப்பதாகவும் வாதாடினர்.

இந்த நிலையில் அனைத்து வாதங்களையும் கேட்ட பிறகு இந்த வழக்கின் பிரதான வழக்கையும் சாந்தி திரையரங்கு சொத்துக்களை விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும் என்ற வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அமீர்கானின் 'லால்சிங் சத்தா': முதல் நாள் வசூல் இவ்வளவு தானா? 2வது நாளே தியேட்டர் குறைப்பு!

ஒருபக்கம் தென்னிந்திய திரைப்படங்கள் சூப்பர் ஹிட்டாகி வரும் நிலையில் பாலிவுட் திரைப்படங்கள் தொடர் தோல்வி அடைந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

10ஆம் வகுப்பு மாணவி இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கும் தனுஷ் பட வில்லன் நடிகர்!

தனுஷ் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் பத்தாம் வகுப்பு மாணவி இயக்கும் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

தமிழில் படம் தயாரிக்கும் ஷாருக்கானின் 'ரெட் சில்லீஸ்' நிறுவனம்: முதல் படம் இதுதான்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்துவரும் 'ஜவான்'  திரைப்படம் தமிழிலும் ரிலீசாக இருக்கும் நிலையில் அவரது ரெட் சில்லீஸ் நிறுவனம் முதல் முறையாக தமிழில் ஒரு திரைப்படத்தை தயாரிக்க

மீண்டும் வெளிநாடு பறந்த நயன் - விக்கி: இரண்டாவது ஹனிமூனா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் 9ஆம் தேதி நடைபெற்றது என்பதும் இந்த திருமணத்திற்கு பல திரையுலக பிரபலங்கள் நேரில்

திருமணம் நிறுத்தப்பட்டுவிட்டதா? ஒரே ஒரு புகைப்படத்தால் பதில் சொன்ன பூர்ணா!

நடிகை பூர்ணாவின் நிச்சயதார்த்தம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த நிலையில் விரைவில் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.