close
Choose your channels

சிவாஜி கணேசன் குடும்பத்தில் சொத்து பிரச்சனை: நீதிமன்றம் சென்றது யார் தெரியுமா?

Thursday, July 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டில் சொத்து பிரச்சனை ஏற்பட்டுள்ளதை அடுத்து அவரது குடும்பத்தினர் நீதிமன்றம் சென்று உள்ளதால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு ராம்குமார், பிரபு, சாந்தி மற்றும் ராஜ்வி ஆகிய 4 வாரிசுகள் உள்ளனர். இவர்களில் நடிகர் பிரபு மற்றும் அவரது சகோதரர் ராம்குமார் ஆகியோர் தங்களுக்கு தெரியாமல் சில சொத்துக்களை விற்று விட்டதாகவும், அவர்களுடைய மகன்கள் பெயருக்கு சில சொத்துக்களை மாற்றம் செய்து விட்டதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவாஜியின் மகள்கள் சாந்தி மற்றும் ராஜ்வி வழக்கு தொடர்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தங்களுடைய தந்தை சிவாஜி கணேசன் சம்பாதித்த சொத்து தொடர்பாக அவர் உயில் எழுதி வைக்காத நிலையில் பிரபு மற்றும் ராம்குமார் ஆகிய இருவரும் ஜோடிக்கப்பட்ட உயில் தயாரித்து தங்களை ஏமாற்றிவிட்டதாக அந்த மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தங்களது தாய் வழி சொத்திலும் தங்களுக்குப் பங்கு வழங்கவில்லை என்றும் சுமார் 10 கோடி மதிப்புள்ள 1000 சவரன் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை தராமல் ஏமாற்றி விட்டதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கோபாலபுரத்தில் இருந்த வீட்டை தங்களுக்கு தெரியாமல் பிரபு மற்றும் ராம்குமார் விற்று விட்டதாகவும் ராயப்பேட்டையில் உள்ள நான்கு வீடுகள் மூலம் வரும் வாடகையில் தங்களுக்கு எந்த பங்கும் வழங்குவதில்லை என்றும் சிவாஜியின் மகள்கள் தங்களது மனுவில் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.