close
Choose your channels

சிவகாமி ரம்யாகிருஷ்ணனுக்கு நேர்ந்த கஷ்டமான அனுபவம்

Sunday, July 26, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தென்னிந்திய திரைப்படமான பாகுபலி முதன்முதலாக ரூ.400 கோடி வசூலை தாண்டி ரூ.500 கோடியை நோக்கி வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் நிலையில், இந்த படம் இன்று இந்தியா முழுவதும் பேசப்படும் படமாக மாறியுள்ளது. இந்த படத்தில் நடித்த ஒவ்வொரு நட்சத்திரங்களும், இந்த படத்தில் பணியாற்றியதில் பெருமைப்படுவதாக கூறி வருகின்றனர். அதே நேரத்தில் இந்த படத்திற்காக அவர்கள் தங்கள் அதிகபட்சை உழைப்பையும் கொடுத்துள்ளனர் என்பதும் அவர்களது பேட்டிகளில் இருந்து தெரிய வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் மிக முக்கியமான மற்றும் பவர்புல்லான கேரக்டரான சிவகாமி கேரக்டரில் நடித்த ரம்யாகிருஷ்ணன், இந்த படத்தில் நடித்த காட்சிகளில் மிகவும் கஷ்டப்பட்டு நடித்த காட்சி எது என்று கேட்டபோது அதற்கு அவர் அளித்த பதில், "இந்த படத்தில் ஒரு குழந்தையை கையில் ஏந்திக்கொண்டு மலைச்சரிவில் உள்ள தண்ணீரில் நடந்து செல்வது போன்ற காட்சியில் நடித்தபோது உடலளவில் மிகவும் கஷ்டப்பட்டேன். ஆனால் இந்த காட்சியை திரையில் பார்த்தபோது, நாம் பட்ட கஷ்டத்திற்கு நல்ல பலன் கிடைத்துள்ளதை அறிந்து பெருமிதம் அடைந்தேன்' என்று கூறியுள்ளார்.

இந்த படத்தில் என்னுடைய கேரக்டருக்கு கிடைத்த பாசிட்டிவ் விமர்சனங்கள் எனக்கு தேசிய விருதே கிடைத்தது போன்ற உணர்வை தந்தது. மேலும் என்னுடைய கேரக்டர் அனைத்து தரப்பினர்களின் இதயத்திலும் வாழ்ந்து வருகிறது என்று தெரியவந்தவுடன் எனக்கு கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.