close
Choose your channels

சிவகார்த்திகேயனின் 14வது படம் குறித்த முக்கிய அறிவிப்பு!

Monday, February 3, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடிப்பில் ’இன்று நேற்று நாளை’ பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வந்த சயின்ஸ் பிக்சன் திரைப்படம் கடந்த 2018ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது ஆனால் திடீரென இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்கள் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பில் தற்போது கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்துள்ளது. இதனை அடுத்து இந்த படம் இனிமேல் தங்குதடையின்றி விறுவிறுப்பாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் டைட்டில் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாகவும் இந்த டைட்டிலை இந்த படத்தின் இசையமைப்பாளர் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்கள் வெளியிட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.

நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்கனவே ‘டாக்டர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும், இந்த படத்தை ‘கோலமாவு கோகிலா’ இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.