ஓவியா இன்னும் மாறவே இல்லை: சிவகார்த்திகேயன்

  • IndiaGlitz, [Thursday,July 27 2017]

பிக்பாஸ் நிகழ்ச்சியால் தமிழகம் முழுவதும் ஒருசில நாட்களில் பிரபலம் ஆனவர் நடிகை ஓவியா. தமிழில் இவர் நடித்த படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெறாவிட்டாலும் இன்று அனைவரின் விருப்பத்திற்குரிய நடிகையாக மாறியுள்ளார்.
இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த முதல் படமான 'மெரினா' படத்தின் நாயகி ஓவியா தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், 'இன்று இருப்பது போலவே மெரினா படத்தில் நடித்தபோதும் ஜாலியாகவும், கள்ளங்கபடம் இல்லாத அப்பாவியாகவும் இருந்ததாகவும், இத்தனை வருடத்தில் அவர் மாறாமல் இருப்பது ஆச்சரியம் என்றும் குறிப்பிட்டார்.
'மெரினா' படத்தில் செந்தில்நாதன் என்ற கேரக்டரில் சிவகார்த்திகேயன், சொப்னசுந்தரி என்ற கேரக்டரில் ஓவியாவும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அஜித், விஜய், சிம்பு, தனுஷ் குறித்து சிவகார்த்திகேயன்

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் தனது ரசிகர்களுடன் சமூக இணையதளம் மூலம் உரையாடியபோது, ரசிகர்களின் கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்தார்

பிக்பாஸ் வீட்டில் திடீர் திருப்பம்: ஜூலி வெளியேற்றப்படுகிறாரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேட் செய்யப்படுபவர்களாக ஓவியா, ஆரவ், ரைசா ஆகியோர் தேர்வு பெற்றிருந்தபோதிலும், இந்த வாரம் யாரும் எலிமினேட் கிடையாது என்று பிக்பாஸ் நேயர்களுக்கு மட்டும் தெரிவித்துள்ளார்.

சின்னக்குயில் சித்ராவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இந்தியாவில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து மொழிகளிலும் பாடிய, ஆறு தேசிய விருதுகளும் ஏழு பிலிம்பேர் விருதுகளும் பெற்ற சின்னக்குயில் சித்ரா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

தயவுசெய்து நிறுத்திக் கொள்ளுங்கள்: ஊடகங்களுக்கு சிம்பு வேண்டுகோள்

சிம்பு நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் இழந்த தன்னுடைய புகழை மீண்டும் மீட்க அவர் 'கெட்டவன்' படத்தை மீண்டும் தொடங்கவுள்ளதாகவும், 'பில்லா 3' படத்தை தயாரித்து இயக்கவுள்ளதாகவும் அதிகாரபூர்வமற்ற செய்திகள் வெளிவந்தன...

நமிதாவின் 'பாதி உண்மை'யில் முழு உண்மை இருக்கின்றதா?

கமல்ஹாசன் நடத்தி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்ட நமீதா தற்போதுதான் தன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்து அவர் ஆங்கிலத்தில் ஒரு கவிதை எழுதியுள்ளார்...