நாம் செய்யும் முதல் தவறு இதுதான்: மாணவர்களுக்கு சிவகார்த்திகேயன் அறிவுரை

  • IndiaGlitz, [Wednesday,January 10 2018]

கோவையில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கான உடல்பருமன் தடுப்புத் திட்டம் குறித்த விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன் பீட்சா, பர்கர் மற்றும் கூல்டிரிங்க்ஸ் சாப்பிடுவதே நாம் செய்யும் முதல் தவறு என்று கூறியதோடு அதற்கு பதிலாக இளநீர் மற்றும் நுங்கு சாப்பிடுங்கள் என்று மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். மேலும் அவர் இந்த நிகழ்ச்சியில் கூறியதாவது:

கோவை எனக்கு புதியதல்ல. என் தந்தை மூன்று வருடங்கள் இங்குதான் பணிபுரிந்தார். அப்போது இதே மைதானத்தில் பலமுறை நான் வந்துள்ளேன். இனிமேல் யாரும் குண்டாக இருப்பவரை கேலி செய்ய கூடாது. அதற்கு பதிலாக நான் கூறும் அறிவுரையை அவர்களுக்கு கூறி குண்டு உடலை குறைக்க அறிவுறுத்துங்கள்

பீட்சா, பர்கர் பலருக்கும் பிடிக்கும் உணவு. ஆனால் பிட்சா, பர்கர் எல்லா சாப்பிடக்கூடாது. அது உடம்புக்கு கெடுதலை தரும். உடல் எடையை அதிகரிக்கும். உடல் பருமன் வாழ்க்கை முறை மாறியதால் வந்த விஷயம். எனவே, நாம் உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் பருமனைக் குறைத்துவிடலாம். அதேபோல, கூல்டிரிங்ஸையும் குடிக்க வெண்டாம். நான் கூல்டிரிங்க்ஸ் குடிக்கறத விட்டு ஏழு வருஷம் ஆச்சு. நான் இப்படி சொல்றதனால, கூல்டிரிங்ஸ் நிறுவனங்கள் என் மீது கோபப்பட வாய்ப்புள்ளது. அதற்கு பதில் நுங்கு, இளநீர், பழச்சாறுகள், காய்கறி ஜூஸ் சாப்பிடுங்கள். அவை கொஞ்சம் டேஸ்ட் குறைவாக இருந்தாலும் உடலுக்கு நல்லது

மக்களுக்கு கேடு விளைவிக்கற எந்த ஒரு விஷயத்த பண்ணக்கூடாது என்பதால் ஒரு கூல்டிரிங்க்ஸ் கம்பெனியோட விளம்பரத்துல நடிக்க மறுத்துட்டேன். நான் இந்த நிலைமைல இருக்க மக்கள்தான் காரணம். என்ன நம்பி தியேட்டருக்கு வந்து, என்ன இந்த இடத்துல வெச்சுருக்கற மக்களுக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு நன்மையத்தான் செய்யணும்.

அதுக்காகத்தான் வேலைக்காரன் மாதிரியான படங்கள நடிக்கறேன். அந்தப் படத்துல உணவு பழக்க வழக்கங்கள் பற்றி சொல்லியிருப்போம். காமெடி படங்கள் மட்டும் இல்லாம, அப்பப்ப வேலைக்காரன் மாதிரியான படங்களில் நடிக்கவும் ஆசை' என்று கூறினார்.

More News

சிங்கம் சிங்கிளாத்தான் வரும்: ரஜினியின் அரசியலுக்கு ஜப்பான் ரசிகர்கள் ஆதரவு

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'முத்து' படத்தில் இருந்து அவர் நடித்த அனைத்து படங்களும் ஜப்பானில் ஹிட்டானது என்பது அனைவரும் அறிந்ததே. தமிழகத்தை போலவே அவருக்கு ஜப்பானிலும் ரசிகர் மன்றம் தோன்றியது.

பிக்பாஸ் ஜூலியின் முதல் பட ரிலீஸ் திடீர் தள்ளிவைப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பங்கேற்பாளர்களான ஓவியாவுக்கு பாசிட்டிவ் புகழ் கிடைத்த நிலையில் அதே நிகழ்ச்சியின் இன்னொரு பங்கேற்பாளரான ஜூலிக்கு நெகட்டிவ் புகழ் கிடைத்தது.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐஸ்வர்யா ராஜேஷ்!

தமிழ் திரையுலகில் வெகு அரிதாகவே சென்னை பெண்கள் பிரபலமாகி வரும் நிலையில் அவர்களில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்

ஊதிய உயர்வு கேட்காத எம்.எல்.ஏக்களுக்கு இன்று ஊதிய உயர்வு மசோதா தாக்கல்

ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஏழு நாட்களாக போராடி வரும் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு ஏற்காத நிலையில் இன்று ஊதிய உயர்வே கேட்காத சட்டமன்ற உறுப்பினர்களுக்கு

ஆதார் பாதுகாப்பு குளறுபடி: 5000 அதிகாரிகள் மீது நடவடிக்கை

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஆதார் அட்டை தேவை என்பதின் அவசியத்தை அறிவுறுத்திய மத்திய மாநில அரசுகள் அந்த ஆதார் அட்டையுடன் அனைத்து முக்கிய ஆவணங்களையும் இணைக்க வலியுறுத்தியது.