சிவகார்த்திகேயன் - நயன்தாரா படத்தின் டைட்டில் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,January 31 2019]

நடிகர் சிவகார்த்திகேயனும், நடிகை நயன்தாராவும், 'வேலைக்காரன்' படத்திற்கு பின் மீண்டும் இணைந்து நடித்து வரும் படம் ஒன்றை இயக்குனர் ராஜேஷ் எம் இயக்கியுள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது என்பதும் தெரிந்ததே

இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் 'ஜித்து ஜில்லாடி' என்றும், 'மிஸ்டர் லோக்கல்' என்றும் வைக்கப்படவுள்ளதாக செய்திகள் கசிந்தன

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாகவிருப்பதாக இந்த படத்தை தயாரித்து வரும் ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இம்மாதம் இந்த படம் குறித்த பல ஆச்சரியமான தகவல்களையும் வெளியிடவுள்ளதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராதிகா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்து வருகிறார்.
 

More News

விஜய்சேதுபதியின் 'லாபத்தில்' பங்கு பெறும் ஸ்ருதிஹாசன்

கோலிவுட் திரையுலகின் பிசியான நடிகர்களில் ஒருவராகிய மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தற்போது 'மாமனிதன்', சிந்துபாத்' உள்பட ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார்.

சந்திரபாபு வாழ்க்கை வரலாறு படத்தில் பிரபல நடிகர்?

எம்ஜிஆர், சிவாஜி ஆகிய இரு ஜாம்பவான்களும் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்தபோதே அவர்களுக்கு இணையான புகழை பெற்றவர் நகைச்சுவை நடிகர் சந்திரபாபு.

அமிதாப்பின் அடுத்த படத்தில் இணையும் 'மெர்சல்' டீம்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் முதல்முறையாக 'உயர்ந்த மனிதன்' என்ற தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தை 'கள்வனின் காதலி' படத்தை இயக்கிய தமிழ்வாணன் இயக்கவுள்ளார்

பொது ரசிகர்களை சென்றடையுமா பேரன்பு?

ராம் இயக்கிய பேரன்பு திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் காட்சி சமீபத்தில் திரையிடப்பட்டது.

மீண்டும் ஒரே படத்தில் இணையும் சூர்யா-கார்த்தி

தமிழ் சினிமாவில் சகோதர நடிகர்கள் இருவருமே முன்னணி நடிகர்களாக இருப்பது அபூர்வமாக நடக்கும் நிகழ்வு.