close
Choose your channels

இப்ப சொல்லுங்க, நான் பண்ணினது தப்பா சார்? டுவிட்டரில் கேள்வி எழுப்பிய சிவகார்த்திகேயன்!

Thursday, November 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்புவின் ’மாநாடு’ திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன் பதிவு செய்த டுவிட்டில், ‘இப்ப சொல்லுங்க, நான் பண்ணினது தப்பா சார்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

சிம்புவின் ’மாநாடு’ திரைப்படம் இன்று பல்வேறு தடைகளை தாண்டி வெற்றிகரமாக ரிலீஸ் ஆனது என்பதும் இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’மாநாடு’ திரைப்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் என்று பதிவு செய்த நடிகர் சிவகார்த்திகேயன், சிம்பு, வெங்கட்பிரபு, கல்யாணி பிரியதர்ஷன், யுவன் சங்கர் ராஜா, சுரேஷ் காமாட்சி ஆகியோரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இந்த ட்வீட்டுக்கு கமெண்ட் அடித்த இந்த படத்தில் நடித்த முக்கிய கேரக்டரில் நடித்தவரும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரருமான பிரேம்ஜி அமரன் ’என்னுடைய பெயரை குறிப்பிடவில்லையே’ என கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், ‘நீங்களும் வெங்கட் பிரபு சார் அவர்களும் ஒன்றுதான் என்று நினைத்துதான் உங்கள் பெயரை சேர்க்கவில்லை. இப்ப சொல்லுங்க நான் பண்ணியது தப்பா சார்? என்று கேள்வி எழுப்பியதோடு உங்களுடைய நடிப்பு சூப்பர் உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்! என தெரிவித்துள்ளார். இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.