close
Choose your channels

'கனா' படத்தை தயாரித்ததால் சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த மரியாதை!

Saturday, February 15, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மகளிர் உலகக் கோப்பை போட்டியை விளம்பரப்படுத்துவதற்காக நடிகர் சிவகார்த்திகேயனை ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம் அணுகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா வரும் 21ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடரை விளம்பரப்படுத்த முடிவெடுத்த சென்றுள்ள ஆஸ்திரேலிய தூதரகம் ‘கனா’ என்ற பெண்கள் கிரிக்கெட் போட்டி கதை குறித்த படத்தை தயாரித்து நடித்த சிவகார்த்திகேயனை விளம்பர தூதராக நியமனம் செய்துள்ளது.

இதுகுறித்து சிவகார்த்திகேயன் கூறுகையில் ’கனா’ என்ற படத்தை தயாரித்ததால் அந்த படத்தை பார்த்து ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை விளம்பரம் செய்ய என்னை அணுகியுள்ளனர். நாம் அனைவரும் இந்த போட்டிக்கு ஆதரவு தரவேண்டும். நமது அணியை மட்டுமல்லாது அனைத்து வீராங்கனைகளுக்கும் நாம் ஆதரவு கொடுக்க வேண்டும். மேலும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற எனது வாழ்த்துக்கள் என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

‘கனா’ என்ற திரைப்படத்தை தயாரித்ததால் சிவகார்த்திகேயனுக்கு இந்த போட்டியை விளம்பரப்படுத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.