தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா: நடராஜன் குறித்து பிரபல நடிகர்!

இன்று நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. முதல் மற்றும் இரண்டாவது ஒருநாள் போட்டிகளில் தோல்வி அடைந்திருந்த இந்திய அணிக்கு இந்த வெற்றி ஒரு ஆறுதல் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இன்றைய போட்டியில் தமிழகத்தை சேர்ந்த நடராஜன் முதல் முறையாக சர்வதேச போட்டியில் களம் இறக்கப்பட்டார் என்பதும், முதல் போட்டியிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது பந்துவீச்சில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் திணறினர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடிய நடராஜனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளத்தில் ’தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா’ என்று குறிப்பிட்டு நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் முதல் போட்டியிலேயே சிறப்பாக செயல்பட்ட நடராஜனுக்கு தனது வாழ்த்துக்கள் என்றும் ஒரு தமிழனை இந்தியாவின் ப்ளூ ஜெர்சியில் பார்ப்பது தனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிவகார்த்திகேயனின் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது

More News

ஆவின் பாலில் சர்க்கரைத் தண்ணீர் கலந்து மோசடி… வெளியான அதிர்ச்சி வீடியோ!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து ஆவின் பால் நிறுவனத்திற்கு அனுப்பப்படும் பசும்பாலில் அம்மாவட்டத்தின் கூட்டுறவு சங்கத் தலைவரே சர்க்கரைத் தண்ணீர் கலந்து அனுப்புவது

கொரோனா வைரஸ் மூக்கு வழியாக மூளைக்குள் நுழைகிறதா??? பதைக்க வைக்கும் தகவல்!!!

தற்போதுவரை கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் நடைமுறையில் இருந்தாலும் கொரோனா பாதிப்பு பற்றிய அச்சம் இல்லாமலே பெரும்பாலான பொதுமக்கள் இயல்பான வாழ்க்கையை வாழத் தொடங்கி விட்டனர்.

ரஜினி அரசியலுக்கு வருவாரா? தமிழருவிமணியன் பரபரப்பு பேட்டி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்த நிலையில் விரைவில் அவர் அரசியலுக்கு வருவாரா?

வித்யாபாலனை இரவு விருந்துக்கு அழைத்தாரா அமைச்சர்? திடுக்கிடும் தகவல்!

பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலனை மத்திய பிரதேச மாநில அமைச்சர் ஒருவர் இரவு விருந்துக்கு அழைத்ததாக வெளிவந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

பாமக மட்டுமல்ல.. பட்டியல், பழங்குடி இனத்தவருக்கும் இடஒதுக்கீடு… முதல்வரின் தொலைநோக்கு திட்டம்!!!

தமிழகத்தில் சாதி வாரியான புள்ளி விவரங்களை சேகரிக்கும் விதிமுறைகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் உரிய தரவுகளை சேகரித்து