close
Choose your channels

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் சிவகார்த்திகேயன் மகள்: என்ன செய்தார் தெரியுமா?

Wednesday, August 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் சென்னையில் நடைபெற்ற 48வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நேற்றுடன் நிறைவடைந்ததை அடுத்து நேற்று பிரம்மாண்டமாக நிறைவு விழா நடைபெற்றது.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த நிறைவு விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்த நிலையில் முதல் கட்டமாக தமிழ் தாய் வாழ்த்துடன் நிறைவு விழா நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

இந்த தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய பெண்களின் குழுவினரில் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனாவும் இருந்தார் என்பதும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா, சிவகார்த்திகேயன் நடித்த ’கனா’ என்ற திரைப்படத்தில் ஒரு பாடலை பாடிய நிலையில் தற்போது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவுவிழாவில் தமிழ்தாய் வாழ்த்து பாடும் குழுவிலும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.