'டாக்டர்' திரைப்படத்தின் வசூல் இத்தனை கோடியா? ஆச்சரியத்தில் திரையுலகம்

  • IndiaGlitz, [Tuesday,October 26 2021]

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் உருவாக்கிய ’டாக்டர்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது என்பதும் இந்தப் படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தமிழகம், இந்தியா உள்பட உலகம் முழுவதும் ’டாக்டர்’ திரைப்படம் இதுவரை 90 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சிவகார்த்திகேயனின் ’வேலைக்காரன்’ திரைப்படம் அதிகபட்சமாக 86 கோடி ரூபாய் உலக அளவில் வசூல் செய்த நிலையில் சிவகார்த்திகேயன் படங்களிலேயே ’டாக்டர்’ திரைப்படம் தான் மிக அதிக வசூலை செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்னும் பல திரையரங்குகளில் ’டாக்டர்’ திரைப்படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பதால் இந்த படம் ரூ.100 கோடி வசூலை இன்னும் ஒரு சில நாட்களில் எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி வரும் வியாழக்கிழமை கேரளாவில் ’டாக்டர்’ திரைப்படம் வெளியாக உள்ளதை அடுத்து ’டாக்டர்’ திரைப்படத்தின் வசூல் கண்டிப்பாக 100 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ’டாக்டர்’ திரைப்படத்தின் வெற்றி தமிழ் திரையுலகில் சிவகார்த்திகேயன் மார்க்கெட்டை உச்சத்திற்கு கொண்டு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ள இந்த படத்தை யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் வெற்றிக்கு அனிருத்தின் இசை ஒரு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

வேற லெவல் குத்துப்பாட்டை எழுதினாரா கமல்ஹாசன்? 

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'விக்ரம்'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. 

ரஜினியை கிண்டல் செய்ய நினைத்து சிக்கலில் மாட்டிய பிரபல இயக்குனர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நேற்று இந்திய திரை உலகின் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது அளிக்கப்பட்டது என்பதும், இதனை அடுத்து ரஜினிகாந்த் அவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத்

ஆபாச சைட்டில் கணக்கு பாடம் நடத்திய ஆசிரியர்… மாணவர் ரியாக்ஷன்ஸ் என்ன தெரியுமா?

ஆபாச வீடியோ வெளியிடும் வெப் சைட் ஒன்றில் தைவான் நாட்டைச் சேர்ந்த

உன் மேல பயங்கரமா கோபமா இருக்கேன்: ஸ்ருதியை எச்சரிக்கும் தாமரை!

பிக்பாஸ் நிகழ்ச்சி 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சி தற்போதுதான் சூடுபிடித்து உள்ளது என்பதும் போட்டியாளர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள்

ஐபிஎல் தொடரில் புதிய 2 அணிகள்… Owners யார் தெரியுமா?

2022-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக இரண்டு அணிகள் இடம்பெறும் என்று ஏற்கனவே பிசிசிஐ தெரிவித்து